மேலும் அறிய

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் ஆளுநர்.. முத்தரசன் பேட்டி

தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் ஆளுநர்.. முத்தரசன் பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ஒன்றிய பா.ஜ.க அரசு தனது அரசியல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அமலாக்கத் துறையை வைத்து எதிரி கட்சிகளை பழிவாங்குவது, கட்சிகளை உடைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. எதிரி கட்சிகளை பலவீனப்படுத்தி தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது.


தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் ஆளுநர்..  முத்தரசன் பேட்டி

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்து அதற்கான முயற்சியும் செய்து வருகிறது. இது சாத்தியமே கிடையாது. மக்களிடையே மோதலை உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதே அவர்களின் பழக்கமாக இருக்கிறது. மக்களை மோத விட்டு அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு உள்ள தந்திர முயற்சி தான் இது.தேர்தலின் போது பா.ஜக. கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? விலைவாசி வியர்வை எவ்வாறு கட்டுப்படுத்த போகிறீர்கள்? 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறியது, கருப்பு பணத்தை மீட்பது, விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை தருவது என்ன ஆயிற்று போன்ற கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். 

ஆனால் பாஜக தலைவர்கள் இதற்கு பதில் சொல்லாமல் பொய் பிரச்சாரம் மூலம் தங்களை தக்க வைத்து கொள்ள முயற்சி செய்கின்றனர்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக மக்கள் ஒன்றிய பாஜக அரசை தோற்கடிப்பார்கள். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து புதிய அணி உருவாகியுள்ளது. அதுதான் வெற்றி பெறும். தமிழக ஆளுநர் தனக்குரிய ஆளுநர் பணியை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதற்கு மாறாக நாலாந்தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார். ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். 


தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் ஆளுநர்..  முத்தரசன் பேட்டி

எனவே தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்கள். அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு ஆளுநராக இருப்பது பொருத்தமும் அல்ல சரியும் அல்ல. ரவீந்திரநாத் எம்.பி-யின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதே நேரத்தில் அவர் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது. ராகுல் காந்தியின் வழக்கில் மேல்முறையீடு செய்து கொள்ள நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. ஆனால் ஒன்றிய அரசு அதை ஏற்கவில்லை. அடுத்த நாளே அவரது பதவியை பறித்தார்கள். இதில் இன்ன செய்ய போகிறார்கள் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget