மேலும் அறிய

திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே வாரத்தில் 4 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

தொடர்ந்து சிக்கும் போலி மருத்துவர்கள் கடந்த 1 வாரத்தில் போலியாக மருத்துவம் பார்த்த 4 பேர் கைது. கொடைக்கானல் பூண்டி கிராமத்தில் மருத்துவத்தில்  பக்கவிளைவுகள் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள்  அரசு மருத்துவமனையில் அனுமதி, சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி
திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை, பூண்டி, கூக்கால், கிளாவரை, குண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனை மற்றும் ஆராம்ப சுகாதார நிலையம் இல்லாத காரணத்தினால் இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்  கொடைக்கானல்,மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு  வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் இந்த மலை கிராமங்களில் மருத்துவர் மற்றும் மருத்துவமனைகள் இல்லாததால் மருத்துவர்களிடம் செவிலியராக பணிபுரிந்த சிலர் அப்பகுதியில் கிராம மக்களை குறி வைத்து வீடு வாடகைக்கு எடுத்து மருத்துவத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்து,மாத்திரைகளை வாங்கி போலியாக அரை குறையாக மருத்துவம்  பார்த்து வந்ததாக கூறப்படுகிறது,


திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

இதில் பூண்டி பகுதியில்  மருத்துவர் என கூறி தேவி என்பவர்  போலியாக மருத்துவம் பார்த்ததில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 20க்கு மேற்பட்டோர் பக்கவிளைவுகள் ஏற்பட்டு  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர  சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பெற்று சிகிக்சை வருகின்றனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த   நாகராஜ் (55)  என்பவர் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அவதிப்பட வந்த நிலையில்  இன்று மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு செல்லும் வழியில்  மரணம் அடைதார். மேலும் மேல்மலை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்க காய்ச்சல்,சளி  தென்பட்டால் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பூம்பாறை,குண்டுபட்டி கிராமங்களில் போலியாக மருத்துவம் பார்த்த மூன்று பேரை ஏற்கனவே  கொடைக்கானல் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,


திண்டுக்கல்: கொரோனா காலத்தில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - ஒரே வாரத்தில் 4 பேர் கைது

கொடைக்கானல் உள்ளடங்கிய கிராமப் பகுதிகளில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் சிக்குவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் முறையான சிகிச்சைக்கு உரிய மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளை நாட வேண்டுமெனவும் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் நோய் கடுமையாக பரவி வரும் நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காவல் துறையினரும், சுகாதாரத்துறையினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget