மேலும் அறிய

ராமநாதபுரம்: 504 ரவுடிகளை கைது செய்தும் அச்சம் தீரவில்லை - கஞ்சா வியாபாரி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

''போதை பொருட்கள் வைத்திருந்த 10 ரவுடிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து, 26 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்''

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் இளைஞர்கள் அதிகமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தங்கச்சிமடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வரும்  நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்த சேது மாணிக்கம் என்பவரை போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார்  வாகனத்தை  சோதனை செய்தபோது இரு சக்கர  வாகனத்தில் 11 கஞ்சா பெட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது.


ராமநாதபுரம்: 504 ரவுடிகளை கைது செய்தும் அச்சம் தீரவில்லை - கஞ்சா வியாபாரி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

இது குறித்து  வாகனத்தை ஓட்டி வந்த சேது மாணிக்கத்திடம்  விசாரித்ததில் மதுரையில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து பின் தங்கச்சிமடம் நகர் பகுதியில்  சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். உடனடியாக போலீசார் சேது மாணிக்கம்  வீட்டிற்கு சென்று வீட்டை  சோதனை  செய்தபோது வீட்டின் பின்புறம் பயன்படுத்த முடியாமல் முற்றிலும் துருப்பிடித்த நிலையில் இரட்டை குழல் நாட்டு கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. கைத்துப்பாக்கி குறித்து சேது மாணிக்கத்திடம்  போலீசார் விசாரித்த போது  10 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இந்த கைத்துப்பாக்கி கிடைத்ததாகவும் அதனை எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.


ராமநாதபுரம்: 504 ரவுடிகளை கைது செய்தும் அச்சம் தீரவில்லை - கஞ்சா வியாபாரி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

சேது மாணிக்கத்திடம் இருந்து கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கி கைப்பற்றப்ட்டதால் அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகார்கள் விசாரணை நடத்தினர்.கைது செய்யப்பட்ட சேது மாணிக்கம் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து  தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வைத்து துப்பாக்கி மற்றும் கஞ்சா குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேது மாணிக்கம்  சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மொத்தம் உள்ள 42 காவல் நிலையங்களில் 504 ரவுடிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.


ராமநாதபுரம்: 504 ரவுடிகளை கைது செய்தும் அச்சம் தீரவில்லை - கஞ்சா வியாபாரி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

இவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , 271 ரவுடிகள் மீது சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது . மீதமுள்ள ரவுடிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் , 23.09.2021 முதல் மேற்படி ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது . இதில் , 235 ரவுடிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டது . மேலும், சோதனையின்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்த 10 ரவுடிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து, 26 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.



ராமநாதபுரம்: 504 ரவுடிகளை கைது செய்தும் அச்சம் தீரவில்லை - கஞ்சா வியாபாரி வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

மேலும், கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் திட்டம் தீட்டிய 18 ரவுடிகள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ரவுடிகளிடமிருந்து, 306 வாள், அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் ஒரு கஞ்சா அவரிடம் கை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாழ  மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து  அவர்கள் வைத்திருக்கும் பயங்கர ஆயுதங்களை  பறிமுதல் செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget