மேலும் அறிய

பொய்யான புகாரின் பேரில் மதுரை வழக்கறிஞர் மீது வழக்கு - போலீஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பொய்யான புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு.

பொய்யான புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

மதுரை மானகிரியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதியில் 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இதுதொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  நீதிமன்ற உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர் தரப்பினர் மிரட்டி வந்தனர். இதுதொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்கு பதிவு செய்தனர். எனவே குற்றச் செயல்களில் புரிந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு,  வழக்கை ஒத்தி வைத்தார்.

 


மற்றொரு வழக்கு
 
கடந்த ஆண்டு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த சேதுராமன் முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். கடலாடி தாலுகா, ஆப்பனூர் அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிட மராமத்து பணிக்கான செலவுத்தொகை ரூ.35 ஆயிரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனுதாரர் வழங்கியுள்ளதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். கடந்த ஆண்டு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சேதுராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், கடலாடி தாலுகா, ஆப்பனூர் அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மராமத்து பணிக்கான செலவுத்தொகை ரூ.35 ஆயிரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனுதாரர் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். பின்னர்  நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி கோயிலில் அர்ச்சகர், ஓதுவார் ஆக அரிய வாய்ப்பு! இலவச பயிற்சி, மாதம் ரூ 10,000 உதவித்தொகை!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
பழனி முருகன் கோயில்: ரூ.100 கோடி வருவாய் ஈட்டி புதிய வரலாறு! முழு விபரம் இதோ!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
வத்திராயிருப்பில் ஆட்சியர் சுகபுத்ரா அதிரடி ஆய்வு: மக்கள் நலன் காக்க முக்கிய அறிவுரைகள்!
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget