மேலும் அறிய

தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

தேனியில் திமுக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ள சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கேரள பதிவு எண் கொண்ட காரில் வந்த அதிகாரிகள் குடோனில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்ட விரோத பணபரிமாற்றம் முறைகேடு புகார்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தில் திமுக பிரமுகருக்கு சொந்தமான ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.


தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் சங்கர். இவர் திமுகவில் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். தேனி அருகே உள்ள போடி இரட்டை வாய்க்கால் அருகில் ஏலக்காய் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக உள்ளார். இவர்களின் மகன் லோகேஷ் திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார். சங்கர் நடத்தி வரும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

இந்த சூழலில்,  கேரள பதிவெண் கொண்ட காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வந்தனர். அவருடன் 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருகை தந்த நிலையில், குடோனில் ஒட்டி இருந்த வர்த்தக நிறுவனம் பூட்டிக்கிடந்தது. இதையடுத்து பூட்டை உடைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். குடோனுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. திமுக நிர்வாகி சங்கரின் வீடு அலுவலகம், ஆகிய இடங்களுக்கும் அமலாக்கத்துறையினர் சோதனைக்காக சென்றனர். ஆனால் பூட்டிக்கிடந்ததால், திரும்பி குடோனுக்கே வந்துவிட்டனர்.


தேனியில் திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! பரபரப்பை ஏற்படுத்திய காரணம் என்ன?

அதேபோல, போடியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரியான சுந்தர் ராஜன், என்பவரது வீடு மற்றும் ஏலக்காய் விற்பனை கடையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏலக்காய் வர்த்தகம் செய்ததில், வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. திமுக நிர்வாகி வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கடந்த 7 மாதத்தில் ரூ.1,200 கோடி அளவுக்கு ஏலக்காய் வர்த்தகம் செய்திருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போடியில் கடந்த 4 ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற்றது என்று தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
Embed widget