மேலும் அறிய

சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம்

”மதுரை சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம் குற்றச்சாட்டு.

கோயில் நகரம் பண்பாட்டுத் தளம் தூங்கா நகரம் என சிறப்பு பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவும் மிகப்பெரிய அடையாளமாக இருந்து வருகிறது புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்ட நிகழ்வும் நடைபெற்றது.  இந்நிலையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 


சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம்

இந்த வைபவம் நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.


சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம்

இந்நிலையில் இது குறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ராஜன் நம்மிடம் பேசினார்..” ’மதுரையில் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் சுவர்கள் எழுப்ப பட்டுள்ளது. அழகர் இறங்கும் இடத்தில் அந்த பாதை அமைந்துள்ளது வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முடியும். ஆற்றின் மற்ற பகுதிகளில் இருந்து வர வாய்ப்பு இல்லாததால் உள்ளே வந்தவர்கள் போக மற்ற நபர்கள் ஆற்றின் எதிர்பக்கம் இருந்து சுவற்றில் ஏறி குதித்து உள்ளே வர முயற்சி செய்வார்கள். எனவே ஆற்றின் தென்கரையில் தற்காலிக பாதை அமைத்து அனைவரும் எளிதில் செல்ல வழி வகை செய்ய வேண்டும். ஆற்றில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன அதனை உடனடியாக மூட வேண்டும்.

வி.ஐ.பிக்காக திருவிழா இல்லை. எளிய மக்கள் தரிசிக்கவே இது போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. வி.ஐ.பிக்காக பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை விரட்டி அடிக்க கூடாது’ - உள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம்   வைகை நதி மக்கள் இயக்கம் திருவிழாவிற்கு முன்பே கோரிக்கைவிடுத்தது. ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் செவிகொடுக்கவில்லை.


சித்திரைத் திருவிழாவில் முன்னேற்பாடுகள் முறையாக செய்திருந்தால் கசப்பான சம்பவங்களை தவிர்த்திருக்கலாம் - வைகை மக்கள் இயக்கம்

இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இப்படியான கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. அதிகாரிகள் முன்னேற்பாடுகளை முறையாக செய்திருந்தால்  பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே வரும் காலங்களில் எங்களை போன்ற இயக்கங்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல் எங்களின் கருத்தையும் எடுத்துக் கொண்டு பரிசீலனை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget