திண்டுக்கல்: நாளை மின் தடை! பராமரிப்பு பணி காரணமாக இப்பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும்.
மின் தடை பகுதிகள்
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி பாப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், தாதநாயக்கன்பட்டி, கரடிக்கூட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவல், பழனி மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நிலக்கோட்டை அருகே உள்ள ராமராஜபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி ராமராஜபுரம், மட்டப்பாறை, விளாம்பட்டி, பெருமாள்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், பொம்மன்பட்டி, குல்லலக்குண்டு, கல்லடிப்பட்டி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்.





















