மேலும் அறிய

திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் - ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்

செம்பட்டி அருகே சுற்றுலா வேனும், காரும் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு. 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரவீன் (வயது 38). இவர், தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று  நண்பகல் இவர், ஒட்டன்சத்திரத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் சின்னாளப்பட்டியை அடுத்த மேட்டுப்பட்டியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் நேற்று தேவதானப்பட்டி அருகே உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர்.

Online Rummy: ஆன்லைன் ரம்மியால் மீண்டும் சோகம்..! ரூ. 4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி


திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

பின்னர் அங்கிருந்து அவர்கள் வத்தலக்குண்டு வழியாக சின்னாளப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். செம்பட்டி அருகே, வத்தலக்குண்டு சாலையில் உள்ள கூலம்பட்டி பிரிவில் வந்தபோது சுற்றுலா வேனும், பிரவீனின் காரும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் நிலை தடுமாறிய சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.  அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கிய பிரவீன் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுலா வேனில் வந்த சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

வழக்குகளை கையாள பயிற்சி அளிப்பதே முதல் வேலை: விலங்கு வதை வழக்குகளுக்காக தமிழ்நாடு அரசு நியமித்த எஸ்பி!
திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த செம்பட்டி  காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் உயிரிழந்த பிரவீனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரவீனுக்கு திவ்யா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம் கே.கீரனூரை சேர்ந்தவர் மாரிமுத்து. அவருடைய மனைவி சிவப்பிரியா. இந்த தம்பதிக்கு யோகேஷ் (வயது 14), கவியரசன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் யோகேஷ், நீலாகன்னிவலசு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று முன்தினம் யோகேசுக்கும், அவரது தம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அண்ணனை, கவியரசன் விளையாட்டாக திட்டியதாக தெரிகிறது.


திண்டுக்கல் : வேன் - கார் நேருக்கு நேர் மோதல் -  ஒருவர் உயிரிழப்பு,  10 பேர் படுகாயம்

அப்போது அவர்களை பெற்றோர் சமரசம் செய்தனர். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சி மருந்தை எடுத்து யோகேஷ் குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கே.கீரனூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவன் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கள்ளிமந்தையம்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விளையாட்டாக நடந்த சண்டையில் மனமுடைந்து, பள்ளி மாணவன் தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
Embed widget