மேலும் அறிய

நண்டு பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு - திண்டுக்கல் அருகே சோகம்

உடனே அவர்களுக்கும் நண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்கிடையே குட்டையில் நண்டு பிடித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கோயில் கும்பாபிசேக விழாவிற்கு சென்ற இரு சிறுவர்கள் கோயில் அருகே உள்ள குட்டையில் நண்டு பிடிக்க சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே கம்மாளப்பட்டியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் தற்போது கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கு நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய உறவினர் பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த வீரமணி. இவர் திண்டுக்கல்லில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கம்மாளப்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வழிபாடு நடத்திய அவர்கள் அன்னதானம் சாப்பிடுவதற்காக சென்றனர்.

மதுரையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில்! காவலர் உட்பட 3 பேர் கைது - இளம் பெண்கள் மீட்பு!


நண்டு பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி  உயிரிழப்பு - திண்டுக்கல் அருகே சோகம்

அப்போது தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும் (வயது 9), வீரமணியின் மகன் சர்வினும் (6) கோயிலுக்கு அருகில் உள்ள குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை பார்த்தனர். உடனே அவர்களுக்கும் நண்டு பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்கிடையே குட்டையில் நண்டு பிடித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இளவரசர் சார்லஸ் டூ அரசர்… சார்லஸின் புதிய அவதாரம்… காத்திருக்கும் பொறுப்புகள் என்னென்ன?

இதையடுத்து குட்டை பகுதிக்கு சென்ற 2 சிறுவர்களும் நண்டு பிடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் குட்டைக்குள் தவறி விழுந்தனர். குட்டையில் தண்ணீர் குறைந்த அளவே இருந்தாலும் இருவரும் சிறுவர்கள் என்பதால் தண்ணீரில் மூழ்கினrர்.

டீ கொடுக்கும்போது உருவான காதல்! ஹாஸ்பிடல் உதவியாளரை மணந்த பெண் டாக்டர்! அழகான காதல் கதை!
நண்டு பிடிக்க சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி  உயிரிழப்பு - திண்டுக்கல் அருகே சோகம்

இதற்கிடையே தங்களின் மகன்களை காணாமல் வீரமணியும், தங்கமணியும் தேடினர். அப்போது குட்டை அருகே சிறுவர்களின் காலணிகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் ஓடிச்சென்று குட்டையில் மூழ்கி கிடந்த சிறுவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லத்தீஷ் வினியும், சர்வினும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வந்த 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
Embed widget