மேலும் அறிய

crime: சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் கொள்ளை - 8 பேர் கைது

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடித்ததும், அடுத்ததாக வாணியம்பாடி பகுதியில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.

வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து  சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18லட்சம் பணம் கொள்ளையடித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 5 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளை அடிக்க சென்றபோது போலீசில் சிக்கினர.  முன்னாள் போலீஸ் மற்றும் பிரஸ் ஜடிகார்டு வைத்திருந்த பெண் உட்பட முக்கிய குற்றாவாளிகள் போலிசாரிடம் சிக்கினர்.


crime:  சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து  நகை, பணம் கொள்ளை -  8 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் வயது 40 ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது மனைவி கலையரசி, மகன் ராமச்சந்திரன், மகள் தனுஸ்ரீ ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.  கடந்த மாதம் 26-ம் தேதி இரவு சீனிவாசன் வெளியில் சென்று இருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டிலிருந்த சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் வைத்திருந்த 5 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 43 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூபாய் 18 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். 


crime:  சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து  நகை, பணம் கொள்ளை -  8 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி-கள் துர்காதேவி, கோகுல கிருஷ்ணன் முருகேசன் தலைமையில் 3 தனி படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனை சாவடியில் வேகமாக வந்த இனோவா காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களைப் பிடித்து போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்தி முனையில் நகை பணத்தை கொள்ளையடித்ததும், அடுத்ததாக வாணியம்பாடி பகுதியில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க சென்று கொண்டிருந்ததும் தெரியவந்தது.


crime:  சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து  நகை, பணம் கொள்ளை -  8 பேர் கைது

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக இடம் வாங்குவதற்காக பூந்தமல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தீனதயாளன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார்.தீனதயாளன் சர்வதேச மனித உரிமைகள் கழக மதுரை மண்டல பொது செயலாளராக உள்ளார் இவரது தோழி மதுரை உத்தப்ப நாயக்கனூரைச் சேர்ந்த ஜோதி என்பவர் மனித உரிமைகள் கழகம் மாவட்ட செயலாளராக உள்ளார்.


crime:  சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து  நகை, பணம் கொள்ளை -  8 பேர் கைது

சீனிவாசன் வீட்டில் அதிகமான பணம் மற்றும் நகைகள் உள்ளது என்று தீனதயாளன் ஜோதிக்கு தகவல் கூறியுள்ளார்.அதனைத் தொடர்ந்து ஜோதி தனது நண்பரான சென்னையில் போலீசாக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருடன் சேர்ந்து, சேலம், நாமக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் அடங்கிய கூலிப்படையை அமைத்து சீனிவாசன் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை கத்தி முறையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ஜோதி, தீனதயாளன், சிராஜுதீன், சதீஷ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் 21பவுன் தங்க நகைகள், ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜோதி என்பவர் போலி பத்திரிகை அட்டை மற்றும் மனித உரிமைகள் கழக அட்டையும் வைத்துள்ளது தெரிய வந்ததுமேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 8பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget