மேலும் அறிய

Crime: ரூ.2000 கொடுத்தால் போலி ஆதார் ! - சிவகங்கையில் பெண் ஏஜெண்டுகள் மூலம் சட்ட விரோதமா ?

பெண் ஏஜெண்டுகள் மூலம் போலி ஆதார் கார்டு, வாக்களர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் போலி ஆதார் அட்டை தயார் செய்யப்படுவதாக தகவல் பரவுகிறது. எனவே இதனை உடனடியாக தடுக்க கணினி மையங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
 
அத்தியாவசிய அட்டையாக இருப்பது ஆதார் அட்டை
 
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அத்தியாவசிய அட்டையாக இருப்பது ஆதார் அட்டை ஆகும். மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டை வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்க, சிலிண்டர் எரிவாயு இணைப்பு பெற, வாக்காளர் அடையாள அட்டை என அரசின் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. இதில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கூட மக்கள் வரிசையில் காத்திக் கிடக்கும் நிலை உள்ளது.
 
மீண்டும் தலை தூக்கும் போலி ஆதார்
 
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் போலியான எண்கள், முகவரி உள்ளிட்ட முக்கிய விபரங்களை மாற்றிக் கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தில் 2020-ம் ஆம் ஆண்டு இதே போல் 7 பெண் ஏஜேண்டுகள் மூலம் கணினி மையம் ஒன்று, போலி ஆதார் கார்டு தயாரிப்பதாக புகார் எழுந்த சூழலில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டுவந்தார். இந்த சூழலில் தற்போது மீண்டும் போலி ஆதார் கார்டு தயாரிக்கும் தொழில் தலை தூக்கியுள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.
 
போலி ஆதார் மூலம் மைக்ரோ பைனான்ஸ்
 
இதுகுறித்து மானமதுரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் நம்மிடம் தெரிவிக்கையில்..,” வரலாற்று நகரமான எங்கள் மாவட்டம் சிவகங்கையில் போலி ஆதார் கார்டு தயாரிக்கும் தொழில் மீண்டும் தலை தூக்கியுள்ளது, வேதனை அளிக்கிறது. பெண் ஏஜெண்டுகள் மூலம் இவ்வாறு போலி ஆதார் கார்டு, வாக்களர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, மைக்ரோ பைனான்ஸ் உள்ளி தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கூட லோன் பெற்று வருகின்றனர். ஏற்கனவே லோன் வாங்கி கட்டவில்லை என்றால் மீண்டும் லோன் வாங்குவது சிரமம். இதனால், போலி ஆதார் எண் மற்றும் முகவரிகளை மாற்றி லோன்களை பெற்று வருகின்றனர்.
 
போலி ஆவணங்கள் தயாரிப்பை நிறுத்த வேண்டும்
 
குறிப்பாக சிவகங்கை நகர் காவல்நிலையம் அருகே உள்ள பெருமாள் கோயில் தெருவில் செயல்படும் தனியார் இ-சேவை மையத்தில் இது போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. சம்மந்தப்பட்ட கணினி மைய உரிமையாளரிடம் இரண்டு இணைய சென்டர்கள் உள்ளது. இதை மையமாக வைத்துக் கொண்டு காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த பெண் ஏஜெண்டுகள் மூலம் கார்டு ஒன்றிற்கு 2 ஆயிரம் ரூபாய் வசூல் செய்து போலி ஆதார் எண்ணுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுக்கின்றனர். அதே போல வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டுகளாக இந்த தொடர் குற்றசம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட தனியார் இ-சேவை மையங்களில் ரகசியமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
 
இந்திய அரசின் கீழ் அடையாள அட்டையாக வழங்கப்படும் ஆதார் கார்டிலும் முறைகேடு நடக்கிறதா? என்று கேட்கும் போதே அதிர்ச்சியாக உள்ளது. எனவே இதனை கண்காணித்து, தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget