மேலும் அறிய

Accident: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சோகம்

விபத்து ஏற்பட்டபோது முன் பக்கத்தில் கார் சீட்டின் எதிரே பொருத்தப்பட்டிருந்த ஏர் பலூன் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்து, அதில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே சாலை தடுப்புச்சுவரில் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் சென்றவர்களில் தம்பதி உயிரிழந்தனர். 2 பேர்  படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (65). இவரது மனைவி பரமேஸ்வரி (60). இவர்களது மகன்கள் மணிகண்டன் (40), பிரபு (30). மணிகண்டன் சுற்றுலா வேன்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 4 பேரும் நேற்று, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பிரபு ஓட்டியுள்ளார். அவருக்கு அருகே முன் சீட்டில் பரமேஸ்வரி அமர்ந்திருந்தார். பின்பக்க சீட்டில் பாலசுப்பிரமணியன், மணிகண்டனும் இருந்தனர்.

Murasoli: நேருக்கு நேராக அரசியல் களத்திற்கு வந்து மோதட்டும்.. ஆளுநர் ரவிக்கு சவால் விடுத்த முரசொலி..!


Accident: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சோகம்

நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் திண்டுக்கல், மதுரை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே அவர்கள் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்புச்சுவரில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் படுகாயம் அடைந்த பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணியன், பிரபு, மணிகண்டன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Irai Anbu IAS : 'ஓய்வுக்கு பிறகு எந்த பதவியும் வேண்டாம்’ அரசு தர முனைந்த பொறுப்பை துறந்தார் இறையன்பு ஐ.ஏ.எஸ்..!


Accident: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சோகம்

Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 6.5 %-ஆக தொடரும் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

பலியான பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் இறந்தார். பிரபு, மணிகண்டன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரில் பயணம் செய்தவர்கள் 'சீட் பெல்ட்' மாட்டி இருந்ததாகவும், விபத்து ஏற்பட்டபோது முன் பக்கத்தில் கார் சீட்டின் எதிரே பொருத்தப்பட்டிருந்த ஏர் பலூன் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்து, அதில் ஒருவர் சம்பவ இடத்தில் இறந்ததாகவும் தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி தம்பதியினர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai : பெண் SI மீது தாக்குதல்  ”காக்கி சட்டையை கழட்டிடுவேன்?”  ஆபாசமாக பேசிய விசிக நிர்வாகிDMK Vs VCK | ”தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை”விசிக தாவிய EX திமுக நிர்வாகி கூட்டணிக்குள் சலசலப்பு!Chennai High Court Warned Seeman | ”வாய்-க்கு வந்ததை பேசாத” சீமானுக்கு நீதிபதி குட்டு” 4 முறை கோர்ட் படி ஏறட்டும்”Thanjavur collector | ”நகைய வித்து படிக்க வச்சாங்க அம்மா இல்லனா...!”தஞ்சாவூர் கலெக்டர் நெகிழ்ச்சி | Priyanka Pankajam | DMK Councillor

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
வடசென்னை மக்களுக்கு வரப்பிரசாதம்.. பெரியார் நகரில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை எப்போது திறப்பு?
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Job : 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு ; முழுவிவரம் இதோ...!
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
Child Harassment: பள்ளிக்கூடங்களா? பாலியல் கூடங்களா? கதறும் சிறுமிகள், குமுறும் பெற்றோர் - தமிழக அரசே, நடவடிக்கை என்ன?
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கும்பமேளாவில் மீண்டும் பயங்கர தீ விபத்து. நாசமான முகாம்கள்! யாருக்கு என்னாச்சு? -வீடியோ
கும்பமேளாவில் மீண்டும் பயங்கர தீ விபத்து. நாசமான முகாம்கள்! யாருக்கு என்னாச்சு? -வீடியோ
Steve Smith:
Steve Smith: "தடை அதை உடை" சத மழை பொழியும் ஸ்டீவ் ஸ்மித் - மீண்டும் ராஜ்ஜியம்!
TNPSC Syllabus Change: தேர்வர்களே... குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம்? டிஎன்பிஎஸ்சி தகவல்
TNPSC Syllabus Change: தேர்வர்களே... குரூப் 1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம்? டிஎன்பிஎஸ்சி தகவல்
Embed widget