மேலும் அறிய

Chalk : 'சாக்பீஸ்' போல கரைகிறது, அதை உருவாக்குபவர்களின் வாழ்வு..!

சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வு கரும்பலையில் எழுதும்போது கரைவதுபோல் கரைந்துவருகிறது.

உருவாக்கப்பட்டவர்களும்,  உருவாக்கியவர்களும் !

அப்படின்னா என்னனு கேக்கறீங்களா? வேற ஒன்னும் இல்லைங்க. சாக்பீஸ் பத்தின ஒரு சிறு கதைதான் இது.  பள்ளிகள் கல்லூரிகளில் பிளாக் போர்டுல எழுதுற சாக்பீஸ் தான் இது. இந்த சாக்பீஸ் பல நல்ல மாணவர்களையும்,  தலைவர்களையும் உருவாக்கியிருக்கும். எப்படின்னு கேட்குறீங்களா? ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் மட்டுமில்ல சாக்பீஸ் இல்லாட்டியும் வகுப்பறையில பாடமே நடத்த முடியாது. இந்த சாக்பீஸ் இல்லாம போர்டுல எழுதவும் முடியாது. வாத்தியார் வர்றதுக்கு முன்னாடியே சாக்பீச எடுத்து ஒளிச்சு வச்ச நினைவுகளும்  நிறைய பேருக்கு இப்பக் கூட கண்ணு முன்னாடி வந்துபோகும்Chalk : 'சாக்பீஸ்' போல கரைகிறது, அதை உருவாக்குபவர்களின் வாழ்வு..!

அதிலும் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது யாராவது ஒருவரை எழுப்பி அந்த பாடம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல முடியாத மாணவர் மேல வாத்தியார் கோபப்பட்டு கையில் இருக்கும் சாக்பீஸதான் முதல்ல தூக்கிப்போடுவாரு. அப்படி சாக்பீஸ் பலரது வாழ்க்கையில ஒரு முக்கிய இடத்த பிடிச்சுருக்கும். இந்த சாக்பிஸ்சால, பாடம் நடத்தப் பட்டு எண்ணிலடங்காத மாணவர்களையும், இதிலிருந்து நல்ல தலைவர்களையும் கூட உருவாக்கியிருக்குன்னு சொல்லலாம். இப்படி இந்த சாக்பீஸ்சால உருவாக்கப்பட்டவர்கள் நிறையபேர். ஆனால் இந்த சாக்பீஸ் உருவாகும் கதையும் அதை உருவாக்குவர்கள் பற்றியும் உங்களுக்கு தெரியுமா..?


Chalk : 'சாக்பீஸ்' போல கரைகிறது, அதை உருவாக்குபவர்களின் வாழ்வு..!

இந்த சாக்பீஸ் சிறு தொழிலான குடிசைத் தொழில்கள் மூலம் தயாரிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடமாக கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டதால இந்த சாக்பீஸோட தேவை இல்லாம போயிடுச்சு. சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலில் இங்க முற்றிலும் முடங்கிப் போச்சு .இது ஒரு குடிசைத் தொழில் தான் இதுல கிடைக்கிற ஒரு சின்ன சின்ன வருமானத்த வச்சுதான், தங்கள் வாழ்க்கையை நடத்தி  வந்தார்கள் இதனை தயாரிக்கும் தொழிலாளர்கள். இந்த கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு, ஊரடங்கு உத்தரவு எல்லாம் இந்த குடிசைத் தொழில்களையும் விட்டு வைக்கல. அப்படி இந்த சாக்பீஸ் உருவாக்கப்படும் இடம்தான் திண்டுக்கல் மாவட்டம். இங்கு பல்வேறு பகுதிகளில் சாக்பீஸ் தயாரிப்பு குடிசைத் தொழிலாக  செயல்பட்டு வருகிறது. இந்த சாக்பீசை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் நீருடன் கலந்து அதை அச்சில் வார்த்து வெண்மை நிற கலர் கொண்ட சாக்பீஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது.


Chalk : 'சாக்பீஸ்' போல கரைகிறது, அதை உருவாக்குபவர்களின் வாழ்வு..!

மேலும் நீருடன் கலர் பொடிகள் சேர்த்து பல வண்ணங்களில் வண்ண சாக்பீஸ் தயாரிக்கப்படுது. இங்குள்ள கம்பெனிகளிலிருந்து தினமும் 2 லட்சத்திற்கும் மேலான சாக்பீஸ் தயாராகி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது.  இதனால் சாக்பீஸ் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் வருமானத்துக்கு வழியில்லாம இருக்காங்க, இதனை தயாரிக்கும் தொழிலாளர்கள்.

 

Chalk : 'சாக்பீஸ்' போல கரைகிறது, அதை உருவாக்குபவர்களின் வாழ்வு..!

இந்த குடிசை தொழில் நடத்துபவர்கள் இப்போ வேறு தொழில்களை நோக்கி, பயணம் செய்யும் நிலைக்கு வந்துட்டாங்கனு கூட சொல்லலாம். தற்போது ஊரடங்கு உத்தரவுகளில் தளர்வு கொடுத்து இருப்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் கூட, கல்வி நிறுவனங்கள் திறக்காமல் தங்கள் தொழில் மீண்டும் உயிர்பெறாது என்கிறார்கள்.

தலைப்பு செய்திகள்

"வாடி வாடி கைப்படாத சிடி..." ஆபாசப் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அமைச்சர்..!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
29 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கும்பக்கரை அருவி.. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
மீனாட்சியம்மன் கோ ல் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கூடாது: ஆணையாளர் உத்தரவு!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!
மதுரையில் நீட் தேர்வு: 15 மையங்களில் விரிவான ஏற்பாடுகள் தயார்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget