மேலும் அறிய

பூங்காக்கள் நகர்ப்புறங்களின் நுரையீரலாக  செயல்படுகிறது - நீதிபதிகள்

பூங்காக்கள் நகர் புறங்களில் உள்ள வெப்ப நிலைகளை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது என  நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் கட்டமைப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
இயற்கையுடன் இணைந்து இருப்பது என்பது சாமானியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் ஆடம்பரமாகவே உள்ளது. பூங்காக்கள் நகர்புறங்களின் நுரையீரல் போல் செயல்படுகிறது. பூங்காக்கள் நகர் புறங்களில் உள்ள வெப்ப நிலைகளை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது என  நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை நகர் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் நகர் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.
 
மதுரை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு பூங்கா என 100 வார்டுகளில் 100 பூங்க அமைக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சி பகுதியில் 53 பூங்கா மட்டுமே உள்ளன அவற்றிலும் 25 பூங்கா மட்டுமே செயல்படுகின்றது. சில பூங்காக்கள் முழுமையாக செயல்படவில்லை. சில பூங்காக்களில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. பல பூங்காக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பூங்காக்களில் முறையான ஊழியர்கள் நியமித்து பொதுமக்களுக்கு தேவையான, நாற்காலிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி மேம்படுத்த வேண்டும். எனவே, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களின் எண்ணிக்கையை அதிகரித்து முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 
 
* மதுரை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் மொத்தம் 199 பூங்காக்கள் உள்ளது. 
 
* மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 16 பூங்காக்கள் மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு 19 பூங்காக்கள் கண்டறியப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
 
* இயற்கையுடன் இணைந்து இருப்பது என்பது சாமானியர்களுக்கும் ஏழை மக்களுக்கும் ஆடம்பரமாகவே உள்ளது.
 
* நகர்ப்புற பகுதியில் உள்ள பூங்காக்கள் சாமானியர்களை மீண்டும் இயற்கையுடன் இணைக்கவும், மனதளவிலும், உடலளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவுகின்றது. 
 
* நகர்ப்புறங்களில் உள்ள பூங்காக்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிகவும் உதவுகின்றது.
 
* சாமானிய மக்களின் இதயங்களில் இயற்கையின் மகத்துவத்தை உணரச் செய்கின்றது.
 
* பூங்காக்கள் நகர் புறங்களில் உள்ள வெப்ப நிலைகளை சரிபடுத்தி குளிர்ச்சியாக வைப்பதற்கும் உதவுகிறது. 
 
* பூங்காக்கள் நகர்ப்புறங்களின் நுரையீரலாக  செயல்படுகிறது
 
* பூங்காக்களை பொழுது போக்கிற்கான இடங்களாக பார்ப்பதை காட்டிலும் சுற்றுச்சூழல்  முன்னேற்றத்திற்கு முக்கியம் என்பதை கட்டாயம் அறிய வேண்டும்.
 
இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பல பூங்காக்களில் தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
 
மேலும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் அடிப்படை வசதிகள் கட்டமைப்புகள் ஏற்படுத்தியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் 12 வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
அஜித், ரஜினி கைகளை பிடித்தவாறு அண்ணாமலை... மதுரையில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்கள் !
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!
இரட்டைப் பச்சிளம் குழந்தைகளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை: தென் தமிழகத்தில் முதல்முறையாக சாதனை!
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
பள்ளிகள் நாளை திறப்பு - மாணவர்களை பைக்கில் அனுப்புவதை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல் !
மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்: 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்!
மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை தொடக்கம்: 3 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Donald Trump: “நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
“நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.!“ ஒப்புக்கொண்ட ட்ரம்ப்; ஈரானுடன் விரைவில் ஒப்பந்தம் எனவும் பேட்டி
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Best Mileage CNG Cars: பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
பட்டையை கிளப்பும் சிஎன்ஜி கார்கள் விற்பனை.! சூப்பர் மைலேஜ் தரும் டாப் 5 CNG கார்கள் லிட்ஸ் இதோ
Embed widget