மேலும் அறிய

ஆந்திராவில் இருந்து தேனிக்கு பெட்டிப்பெட்டியாக கொரியரில் அனுப்பப்பட்ட கஞ்சா

கொரியர் மூலம் வந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்

தேனி மாவட்டம் அடர்ந்த காடுகளையும், குளிர்ச்சியான சுற்றுசூழலையும் கொண்டிருக்கும் ஒரு அழகிய மாவட்டம். இங்கிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளின் அடர்ந்த வனப்பகுதியை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா பயிரிடப்பட்டும் கடத்தியும் வந்தனர். பல ஆண்டுகளாக இந்த சட்டவிரோத செயல்களை அடக்க போலீசார் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு காட்டு பகுதிகளில் பல வருடங்களுக்கு முன்பு கஞ்சா பயிரிடுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டது .ஆனால் இன்னும் ஒரு சில பகுதிகளில் கஞ்சா கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கஞ்சாக்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


ஆந்திராவில் இருந்து தேனிக்கு பெட்டிப்பெட்டியாக கொரியரில் அனுப்பப்பட்ட கஞ்சா

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பம் பகுதிக்கு கஞ்சாவை கடத்தி வந்து அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வழிகளில் கடத்தி வருகின்றனர். இந்த செயலை தடுக்க தேனி மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கஞ்சா கடத்துபவர்களையும் பதுக்கி வைத்து விற்பனை விற்பனை செய்பவர்களையும் தீவிரமாக கண்காணித்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.


ஆந்திராவில் இருந்து தேனிக்கு பெட்டிப்பெட்டியாக கொரியரில் அனுப்பப்பட்ட கஞ்சா

இந்நிலையில் தேனி மாவட்ட கஞ்சா பதுக்கல், விற்பனையை தடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின் பேரில் எஸ்.ஐ விஜயானந்த் தலைமையில் 4 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகள் இரவும் பகலும் முழுவதும் தேனி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திட்டச்சாலையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்த ஒருவருக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள பார்சலை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்த கொரியர் அலுவலகத்தில் இருந்த அந்த பார்சலில், 2 அட்டைப் பெட்டிகளில் 22 கிலோ எடையில் 10 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.


ஆந்திராவில் இருந்து தேனிக்கு பெட்டிப்பெட்டியாக கொரியரில் அனுப்பப்பட்ட கஞ்சா

கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாவை தனிப்படையினர் பறிமுதல் செய்ததோடு, அந்த பார்சலில் இருந்த முகவரி ஆய்வு செய்ததில் போலி என்பது தெரியவந்துள்ளது. அதனை அடுத்து பார்சலில் உள்ள அலைபேசி எண்ணை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன் திண்டுக்கல் டிஐஜி விஜயகுமாரி தலைமையில் தேனி எஸ்.பி.பிரவின் உமேஷ் டோங்ரே முன்னிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பார்சல் மற்றும் கொரியர் நிறுவன மேலாளர்கள்,உரிமையாளர்களுடன் நடந்த கூட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா பொருட்களை பார்சல்கள் மூலம் கடத்தலை தடுக்கும் பொருட்டு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


ஆந்திராவில் இருந்து தேனிக்கு பெட்டிப்பெட்டியாக கொரியரில் அனுப்பப்பட்ட கஞ்சா

இதற்கு முன் இருசக்கர வாகனம், ஆட்டோ, லாரிகள், பொதுப் போக்குவரத்துகளில் கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில் இப்போது புதிய உத்தியாக பார்சல் மற்றும் கொரியர் நிறுவனங்கள் மூலம் கஞ்சாவை வரவழைத்து விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget