மேலும் அறிய

மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் - வாழை விவசாயிகள்  

வாழைப்பழத்திற்கு எப்போதும் ஒரே மாதிரியான நிலையான விலை கிடைக்க, வாழைப்பழத்திலிருந்து மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க வேண்டும் .

உலக அளவில் வாழை ஏற்றுமதிக்கு என்று ஒரு பெரிய சந்தை உள்ளது எனலாம். சர்வதேச அளவில் 97.5 லட்சம் மில்லியன் டன் வாழை ஆண்டு தோறும் உற்பத்தியாகிறது. இதில் இந்தியாவில் மட்டும் 16.91 லட்சம் மில்லியன் டன் உற்பத்தியாகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்கள்  ஏறக்குறைய 90 சதவீதம் உள்நாட்டு தேவைக்கு பயன்படுகிறது. 10 சதவீதம் மட்டுமே ஏற்றுமதியாகிறது. குறைந்த அளவிலான வாழைப் பழங்கள் ஏற்றுமதி ஆனாலும் அதற்குப் போதிய விலை கிடைக்கிறது என்கின்றனர் விவசாயிகள். இருந்தபோதிலும் இங்கு உற்பத்தியாகும் பெரும்பாலான பழங்கள் உள்நாட்டிலேயே  அதன் சந்தை உள்ளதால், வாழைப் பழங்களுக்கு நிலையான  விலை கிடைக்காமல்  இருப்பதால், வாழைப்பழங்களுக்கான விலை  கிடைக்காத சமயங்களில் விவசாயிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் - வாழை விவசாயிகள்  

இதே போன்ற நிலைமையைதான் தேனி மாவட்டம் கம்பம் பகுதி வாழை விவசாயிகளும்  சந்திக்கின்றனர். இதற்குத் தீர்வாக,  ஆண்டுதோறும் கட்டுபடியான விலை கிடைக்க வாழைப்பழத்தில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள்கள் குறிப்பாக ஜாம். ஜெல்லி, பவுடர், பானம் தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத் தாக்கில் தமிழக அரசு அமைக்க வேண்டும் என கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறிவருகின்றனர்.

மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் - வாழை விவசாயிகள்  

இதுகுறித்து தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு வாழை விவசாயிகள் கூறுகையில், "தேனி மாவட்டம் ஒரு விவசாய பகுதியாக பார்க்கப்படுகிறது. இங்கு நெல் திராட்சை, வாழை, மா, தென்னை,  கரும்பு ஆகியவைகளின் விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் பெருமளவில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி சுமார் 4 ஆயிரம் எக்டேரில் பயிரிட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது செவ்வாழை,  நேந்த்ரம்,  நாழிப்பூவன்,  ஜி 9 என பல ரகங்கள் சாகுபடியாகிறது. தேனி மாவட்டத்தில் விளையும் வாழைப்பழத்திற்கு அதிக சுவை இருக்கும் என்பதால், வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது.

மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் - வாழை விவசாயிகள்  

ஆனாலும் இப்பகுதி வாழைப்பழத்திற்கான விலை நிலையாக இல்லாமல் குறைவதும், அதிகரிப்பதும் மாறிமாறி நடக்கும். இருந்தபோதிலும் உற்பத்திக்கான செலவுகள் குறையாது. மாறாக உரம், பூச்சி மருந்துகள், தொழிலாளர் கூலி உயர்ந்து கொண்டே போகிறது. தொடர்மழை,  பலமான காற்று ஆகிய  இயற்கை சீற்றங்களால் வாழைகள் சேதம் ஏற்படுவதும் தொடர்கிறது.

மதிப்புக்கூட்டிய உணவு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் - வாழை விவசாயிகள்  

இந்நிலையில் வாழைப் பழங்களுக்கு நிலையான விலையை ஏற்படுத்த,  வாழைப் பழத்தை பயன்படுத்தி மதிப்புக்கூட்டிய உணவுப் பொருள்களான ஜூஸ், ஜெல்லி, ஜாம், பவுடர், ஆகிய பொருள்களை   தயாரிக்கும் தொழிற்சாலையை கம்பம் பள்ளத்தாக்கில் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்" என இப்பகுதி வாழை  சாகுபடியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

 

https://bit.ly/2TMX27X

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
Breaking News LIVE, July 5: தமிழ்நாட்டில் இன்று 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹூட்டை கடந்த வெயில்
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget