மேலும் அறிய

கஞ்சா வழக்கில் சொத்துக்கள் முடக்கம் - தேனி , திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடி..!

தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் நத்தம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் கடத்தி வரப்பட்ட 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் 7 பேர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த குணசேகரன், அழகு, அம்சுபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


கஞ்சா வழக்கில் சொத்துக்கள் முடக்கம் - தேனி , திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடி..!

பின்னர் அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே கஞ்சா வியாபாரிகளான 3 பேரின் சொத்துகளை முடக்கும்படி தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 3 பேருடைய சொத்துகளின் விவரங்களை சேகரித்து, அவற்றை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.


கஞ்சா வழக்கில் சொத்துக்கள் முடக்கம் - தேனி , திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடி..!

அதன்படி, குணசேகரன், அம்சுபாண்டி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருந்த வீடு, நிலம், வீட்டுமனை என மொத்தம் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை போலீசார் முடக்கினர். இதேபோல் கஞ்சா விற்பனை செய்வோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயரில் இருக்கும் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கஞ்சா வழக்கில் சொத்துக்கள் முடக்கம் - தேனி , திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடி..!

அதேபோல தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரை கஞ்சா கடத்திய வழக்கில் தேனி போதைப்பொருள் போலீசார் சமீபத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கிய அவருடைய சொத்துக்களை முடக்க கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.


கஞ்சா வழக்கில் சொத்துக்கள் முடக்கம் - தேனி , திண்டுக்கல்லில் போலீஸ் அதிரடி..!

இதையடுத்து தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீசார், கஞ்சா வியாபாரி மலைச்சாமியின் சொத்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து அவருக்கு சொந்தமான சுமார் 15 செண்ட் நிலம், வங்கிக் கணக்கு ஆகியவற்றை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.13 ஆயிரத்து 952 இருந்தது. அந்த வங்கிக் கணக்கு மற்றும் நிலம் ஆகிய சொத்துக்கள் முடக்கப்பட்டன.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
தருமபுரி நகரில் நள்ளிரவில் பர்னிச்சர் கடைக்குள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
தருமபுரி நகரில் நள்ளிரவில் பர்னிச்சர் கடைக்குள் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
Embed widget