மேலும் அறிய

அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டத்தை அறிவித்து கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அதிமுக சார்பில் திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக துணை பொது செயலாளர் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்று கள்ளச்சாராயத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினார்.


அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தி 60 பேர் வரை உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 12 பேருக்கு கண் பார்வை பறிபோனது. பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருவதோடு, சாராயம் விற்ற கன்னுக்குட்டி உள்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது.


அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைக்கு நான் வனத் துறை அமைச்சராக இருந்தபோது சென்றிருந்தேன்.

எங்கு பார்த்தாலும் அடுப்பு எரிந்துகொண்டு இருந்தது. என்ன என்று கேட்டபோது, சாராயம் காய்ச்சுகிறார்கள் என்று கூறினர். இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் இதையெல்லாம் தடுக்க மாட்டாரா? என்று நான் கேட்டேன். அதற்கு அவர்களோ, உதயசூரியன் தயவில் தான் சாராயமே காய்ச்சுகிறார்கள். அவர்தான் தங்களுக்கு கடவுள் என்று தெரிவித்தார்கள்.


அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் அதிமுகவினர் அதிர்ச்சி

இரண்டு நாட்களுக்கு முன்பு கல்வராயன் மலையில் 15,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளச் சாராயத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவேன், தனது பதிலுக்கு பயந்துகொண்டுதான் அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததாக கூறுகிறார். அவர் வருவதற்கு முன்பே சட்டமன்றத்தில் இருந்து நாங்கள் வெளிநடப்பு செய்துவிட்டோம். நாங்கள் எதற்காக பயப்பட போகிறோம். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து மட்டும் இருந்திருந்தால் உயிரிழப்பு 5 பேருடன் முடிந்திருக்கும். 60 பேர் வரை உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

ஆனால், கள்ளச் சாராயத்தால் நிகழ்ந்த மரணத்தை எப்படி உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்று சொல்லலாம். திமுக எப்படி 40 இடங்களைக் கைப்பற்றியதோ அதே வித்தையை கையாண்டு வரும் 2026 தேர்தலில் வென்று தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அமர்வார்" என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருப்பது கூட்டத்தில் இருந்த அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget