மேலும் அறிய
Abpnadu Impact: வைகையில் குப்பைகளை அகற்றி தண்ணீரை வடிய வைத்த காவலருக்கு தமிழக டி.ஜி.பி. பாராட்டு!
தலைமை காவலர் ராமனை டி.ஜி.பி சைலேந்திர பாபு, பண வெகுமதி அளித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தலைமை காவலர் ராமனை டிஜிபி பாராட்டியபோது
கடந்த சில வாரமாக வடகிழக்கு பருவமழையால் பல்வேறு இடங்களில் நல்ல மழைப் பொழிவு இருந்தது. அதே போல் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் வைகை அணையில் 70 அடிக்கு மேல் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
வீடியோ -https://t.co/WzxifG8prG
— arunchinna (@arunreporter92) November 21, 2022
செய்தி - https://t.co/xr8txd5xOX
மதுரை காவலர் ராமனை பாராட்டி #abpnadu சைட்டிலும், you tube -லும் முதன் முதலாக செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் காவலர் ராமனை டிஜிபி பாராட்டி, பண வெகுமதி அளித்துள்ளார் மகிழ்ச்சி@Mdu_CityPolice | @SRajaJourno | pic.twitter.com/zMtVvvO49q
மதுரை பகுதியில் 10 ஆயிரம் கனஅடி நீரானது ஆர்ப்பரித்து வந்தது . இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள தரைப் பாலம் முழுவதும் தண்ணீர் நிறைந்து சென்றது. இந்த சூழலில் இதில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சாலைகளை ஆக்கிரமித்தவாறு சென்றது. இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளர் கல்யாண சுந்தரம் மற்றும் காவலர் ராமன் ஈடுபட்டிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















