Tamil Nadu Election 2026: திண்டுக்கல் 7 சட்டமன்ற தொகுதிகளில் 86.35% வாக்குப்பதிவு – அமைதியாக நிறைவு பெற்ற தேர்தல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் 83.94% பழனி 83.58% ,ஒட்டன்சத்திரம் 88.63%,வேடசந்தூர் 88.86% ,நிலக்கோட்டை 85.43%, ஆத்தூர் 86.08%, நத்தம் 87.89% சதவீதபதிவாகியுள்ளது

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன இந்த ஏழு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி ஆறு மணிக்கு நிறைவடைந்தது. இதில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓம்.எம்.ஆர் பட்டி, கோவிந்தாபுரம், சோலைஹால் தெரு ஆகிய 3 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் 83.94% பழனி 83.58,% ஒட்டன்சத்திரம் 88.63%,வேடசந்தூர் 88.86% நிலக்கோட்டை 85.43%,ஆத்தூர் 86.08%,நத்தம் 87.89% சதவீதபதிவாகியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளில் பதிவாகியுள்ளது. இதற்கிடையே திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டது. இரண்டு நபர்களின் வாக்குகளை வேறு நபர்கள் போட்டு விட்டதாக கூறி தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணியில் இருந்த தேர்தல் அலுவலர்கள் டெண்டர் ஓட்டு மூலம் அவர்களை சமரசம் செய்தனர்.ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட வீரக்கல் பகுதியில் முன்விரோதம் காரணமாக திமுகவினை சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து மாலை ஏழு சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து மூடினர்.

தொடர்ந்து வாக்குப்பட்டி இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன்கள் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பழனி சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. இந்த வளாகத்தை24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் பெரிய அளவிலா அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்






















