மேலும் அறிய

தொழிற்சங்கங்களின் 2ஆம் நாள் வேலை நிறுத்தம் - திண்டுக்கல்லில் 80% பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி

இரண்டு நாள் தொடர் வேலை நிறுத்தத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் தவிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் தவித்தனர். மத்திய அரசை கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் நேற்றும் இன்றும் பணிக்கு வரவில்லை.


தொழிற்சங்கங்களின் 2ஆம் நாள் வேலை நிறுத்தம் - திண்டுக்கல்லில் 80% பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி

இதனால் மாவட்டம் முழுவதும் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதிலும் பெரும்பாலானவை தனியார் பேருந்துகள் ஆகும். தனியார் பேருந்துகளை பொறுத்தவரை ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமின்றி இதர வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன. அதேநேரம் 80 சதவீத அரசு பேருந்துகள்  இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் உள்ள 10 பணிமனைகளிலும் பேருந்துகள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் திண்டுக்கல்லை பொறுத்தவரை தென்மாவட்டங்களின் நுழைவுவாயில் போன்று அமைந்துள்ளது. இதனால் மதுரை, திருச்சி, சேலம், கோவை, சென்னை உள்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று மற்றும் இன்றைய தினம் வௌியூர் பேருந்துகளை பார்ப்பதே அரிதாக இருந்தது. இதற்கிடையே அதிலும் நேற்றைய தினம் திங்கட்கிழமை என்பதால் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், அந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்தனர். அதேபோல் பெரும்பாலான கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியவில்லை. ஆட்டோ, சரக்கு வாகனங்கள், மினிவேன்களில் அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். இது ஒருபுறம் இருக்க கொரோனாவால் மூடிக்கிடந்த பள்ளி, கல்லூரிகளில் தற்போது வகுப்புகள் மும்முரமாக நடக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் மாணவ-மாணவிகள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


தொழிற்சங்கங்களின் 2ஆம் நாள் வேலை நிறுத்தம் - திண்டுக்கல்லில் 80% பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி

அதன்படி தொடர்ந்து வழக்கம் போல் பேருந்துகளில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பேருந்துகள் இன்றி மிகவும் அவதிப்பட்டனர்.  மேலும் உள்ளூர் பேருந்துகள் மட்டுமின்றி வெளியூர் பேருந்துகளும் அதிக அளவில் ஓடவில்லை. இதனால் வெளியூர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வரமுடியாமல் தவித்தனர். அதேநேரம் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டதால், பொதுமக்களின் பார்வை ரயில் மீது திரும்பியது. இதையடுத்து முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுத்து ரயிலில் சென்றனர். இதன் காரணமாக நேற்றைய தினம் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தொழிற்சங்கங்களின் 2ஆம் நாள் வேலை நிறுத்தம் - திண்டுக்கல்லில் 80% பேருந்துகள் ஓடாததால் மக்கள் அவதி
பேருந்துகள் ஓடாததால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் ஆட்டோ, மினிவேன், வேன்களில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. ஒருசில கிராமங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் மக்கள் பயணம் செய்தனர். இதை பயன்படுத்தி வாடகை வாகனங்களில் பொதுமக்களிடம் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget