மேலும் அறிய

24 அடியில் பட்டுச்சேலை.. ஒரே நாளில் ஒரு பட்டு சேலையை உருவாக்கும் பட்டுத்தறி..! சுவாரஸ்ய தகவல் இதோ..!

காஞ்சிபுரத்தில் 24 அடியில் கைத்தறி பட்டு சேலை தயாரித்த நெசவாளர், ஒரு சேலையை ஒரே நாளில் தயாரிக்க முடியும் என நம்பிக்கை

காஞ்சிபுரம் பட்டு சேலை ( kanchipuram silk sarees )

காஞ்சிபுரம் என்பது கோவில் நகரமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு என தனி அடையாளத்தை உருவாக்கி தந்தது காஞ்சிபுரம் பட்டு. கைத்தடியில் உருவாகும் காஞ்சிபுரம் பட்டு இருக்கு உலக அளவில் ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது, நெசவாளர்கள் வேலை இழந்து வேறு சில தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பல இன்னல்களுக்கு மத்தியில் இன்னும் சிலர் தங்கள் தொழிலை விடாமல் தொடர்ந்து நெசவு செய்து வருகின்றனர்.
 
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் ஒருவர் பட்டுப்புடவைகள் தயாரிப்பது மட்டுமில்லாமல் பட்டுப் புடவைகளில் , விரும்பும் உருவங்களை வடிவமைத்து தந்து வருகிறார். தொடர்ந்து தனது நெசவுத் தொழிலில் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை உருவாக்கியும் வருகிறார் அவர். அந்த வகையில் தற்பொழுது ஒரு புடவையை ஒரே நாளில், உருவாக்கும் தறியை அமைத்து சாதித்துள்ளார்.

24 அடியில் பட்டுச்சேலை.. ஒரே நாளில் ஒரு பட்டு சேலையை உருவாக்கும் பட்டுத்தறி..! சுவாரஸ்ய தகவல் இதோ..!

பேரறிஞர் அண்ணா பட்டு பூங்கா ( Arignar Anna Memorial Park - Kanchipuram )

காஞ்சிபுரம் அடுத்துள்ள கீழ்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் நெசவாளர்களுக்கு என்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டுப்பூங்காவில் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் குமரவேல் என்கின்ற பட்டு நெசவு வடிவமைப்பாளர் மூலம், பிரம்மாண்ட கைத்தறியை அமைத்து அவற்றில் 24 அடி அகலம் கொண்ட வாலாங்கி சேலையை வடிவமைத்துள்ளார். பெரிய வணிக தலங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் மிகப் பெரிய வடிவமைப்பிளான கைத்தறி சேலையாகும்.

24 அடியில் பட்டுச்சேலை.. ஒரே நாளில் ஒரு பட்டு சேலையை உருவாக்கும் பட்டுத்தறி..! சுவாரஸ்ய தகவல் இதோ..!

வடிவமைக்க 5 நெசவாளர்கள்

இதுபோன்ற வாலாங்கி சேலை 24 அடி அகலமும் வடிவமைப்புக்கு ஏற்ற மாதிரி அதிகப்படியான நீளமும் கொண்டு தயாரிக்கலாம் என்றும், இவற்றை வடிவமைக்க 5 நெசவாளர்கள் உடன் பணியாளர்கள் 4 பேர் மற்றும் மின்சார வடிவமைப்பு பொறியாளர்கள் என குழுக்களாக செயல்பட்டால் மட்டுமே, இது போன்ற வாலாங்கி சேலைகளை வடிவமைக்கலாம் எனக் கூறுகிறார் குமரவேல். மேலும் பயனாளிகள் கேட்கும் வடிவத்தில் வாலாங்கி சேலை காஞ்சிபுரம் பட்டு பூங்காவில் தயார் செய்து தரலாம் என்றும் வடிவமைப்பாளர் குமரவேல் தெரிவித்தார்.

24 அடியில் பட்டுச்சேலை.. ஒரே நாளில் ஒரு பட்டு சேலையை உருவாக்கும் பட்டுத்தறி..! சுவாரஸ்ய தகவல் இதோ..!

ஒரே நாளில் சேலை

சராசரியாக கைத்தறி நெசவு செய்து பெண்கள் அணியும் பட்டு 6 கொண்டதாகவும் சேலைகள் 50 இன்ச் அகலமும் 240 இன்ச் நீளமும் கொண்டிருக்கும், இவை குறைந்தது  வடிவமைப்பதற்கும் சேலை உற்பத்தி செய்யவும் 10 முதல் 15 நாட்களாவது ஆகும். 
தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள பட்டு தறியில், அகலமும் வடிவத்திற்கு ஏற்றார்ப்போல் அதிகப்படியான நீளம் உருவாக்கப்பட்டுள்ளதால், 5  நெசவாளர்கள் கொண்டு காலையில் 6:00 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்குள் ஒரே நாளில் அனைத்து ரக பட்டுப் புடவைகளையும், செய்து முடிக்க முடியும்.

24 அடியில் பட்டுச்சேலை.. ஒரே நாளில் ஒரு பட்டு சேலையை உருவாக்கும் பட்டுத்தறி..! சுவாரஸ்ய தகவல் இதோ..!
 
இந்த பிரமாண்ட கைத்தறியை வடிவமைக்க மூன்று மாதம் ஆனதாகவும் , இது கைத்தறி நெசவு தொழில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வரவும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் குமரவேல். தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ள தறியின் மூலம் தஞ்சை பெரிய கோவில் உட்பட பல்வேறு கோவில் கோபுரங்களை முழுமையாக பட்டுப் புடவைகளை கொண்டுவர முடியும் பல்வேறு நடிகர்கள் புகைப்படம் உட்பட அனைத்து விதமான புகைப்படங்களையும் பட்டு சேலையில் கொண்டுவர முடியும் என தெரிவிக்கிறார். பாரம்பரியம் மாறாமல் கைத்தறியில் புடவையை உருவாக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கும், இந்த நெசவாளர்களை நாம் பாராட்டலாமே
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்Sanjiv goenka scolding KL Rahul | CSK-வில் ராகுலா? பதறிய பயிற்சியாளர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Breaking News LIVE: யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நீதிமன்ற காவல்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Embed widget