மேலும் அறிய

காஞ்சிபுரம்: கனமழை எச்சரிக்கை! புகார் அளிக்க அவசர உதவி எண்கள் அறிவிப்பு! Save பண்ணி வச்சுக்கோங்க!

Kanchipuram Rain Complaint Number: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்பான புகார் தெரிவிக்க அலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 044- 27237107 மற்றும் 805621077 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வடகிழக்கு பருவமழை - Kanchipuram Monsoon rain 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழையின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து எச்சரித்துள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆறு மணி நேரத்தில் வாலாஜாபாத் 3.6 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 3.4 செ.மீ, குன்றத்தூரில் 13 மில்லி மீட்ரும், செம்பரம்பாக்கத்தில் 23 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரத்தில் நிரம்பும் ஏரிகள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம், மணிமங்கலம் ஏரிகள் நீர் நிரம்பும் நிலையில் உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடியில், 21.20 அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3.6 டிஎம்சி நீர் தேக்கி வைக்க முடியும். தற்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் 2.6 டிஎம்சி ஆக இருக்கிறது. 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு 296 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கத்தில் இருந்து 195 கன அடி (குடிநீர் தேவைக்காக 165 மற்றும் இதர தேவைக்காக மீதி கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது) நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 22.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாகவும் , 56 ஏரிகள் 90 சதவீதத்தையும், 224 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டி நீர் நிரம்பியுள்ளது.  

தொலைபேசி எண் அறிவிப்பு - Kanchipuram Disaster Management Complaint number 

மேலும் பேரிடர் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் பேரிடர் தொடர்பான புகார்களை பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க 044 - 27237107 மற்றும் 805621077 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார். மாவட்டத்தின் முக்கிய விவசாய ஏரிகள் நீர் நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget