School Leave: காஞ்சிபுரம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை! கனமழை எச்சரிக்கை, ஆட்சியர் அறிவிப்பு!
Kanchipuram School Leave: " மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது"

இன்று (03.12.2025) காஞ்சிபுரம் மாவட்டத்தில், டிட்வா புயல் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
மழை எச்சரிக்கை என்ன ?
தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. மேலும், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரம் வரை அதே நிலையில் இருந்து, பின்னர் மேலும் வலுவிழந்து, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை அடங்கும். சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படவில்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நள்ளிரவிலும் தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வந்தது. இன்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.





















