மேலும் அறிய

Turkiye-Syria Earthquake: பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்காக இந்தியாவை பாராட்டிய உலக நாடுகள்... பிரதமர் மோடி பெருமிதம்..!

சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரிடர் காலத்தில் உயிரிழப்பை குறைப்பதை உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்து வருகிறது இந்தியா. சமீபத்தில் கூட, கடும் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த சிரியா, துருக்கிக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 

இச்சூழலில், பேரிடர் மேலாண்மையில் முடிவுகளை எடுக்கும்போது பலதரப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைப்பதற்காக பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளம் உருவாக்கப்பட்டது.

பேரிடர் அபாயங்களை குறைக்க தேசிய தளம்:

அதன் மூன்றாவது அமர்வை, நாட்டின் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, பேரிடர் மேலாண்மையில் வெற்றிக்கான தாரக மந்திரத்தை எடுத்துரைத்து பேசிய அவர், "சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரிடர் காலத்தில் உயிரிழப்பை குறைப்பதை உறுதி செய்யும்.

உள்ளார்ந்து மீண்டெழு உள்ளூரின் பங்கேற்பு அவசியம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை, பலப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, நிகழ்நேர பதிவு மற்றும் ஒவ்வொரு தெரு மற்றும் ஒவ்வொரு வீட்டையும் கண்காணித்தல் ஆகியவை பேரழிவுகளின் போது  இழப்புகளை குறைப்பதை உறுதி செய்யும்.

பேரிடர் மேலாண்மையை மனதில் வைத்து புதிய வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். இதற்காக நாம் இரண்டு நிலைகளில் பணியாற்ற வேண்டும் .

பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

1. பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் உள்ளூர் பங்கேற்பில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். 2. பேரிடர்களுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மையை கவனிக்க எப்போதும் உள்ளூர் அமைப்பு இருந்திருக்கிறது. கட்ச் மக்கள் புங்கா என்றழைக்கப்படும் சேற்று வீடுகளில் வாழ்கின்றனர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்ச் ஒரு பெரிய நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது. ஆனால், இந்த புங்கா வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.

பண்டைய கால எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாட்டிற்கான பேரிடர் மேலாண்மைக்கான ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பழைய காலத்தில், எல்லா கிராமத்திலும் ஒரு ‘வைத்யராஜ்’ (மருத்துவர்) இருந்திருக்கிறார்.

இன்று, பல்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருத்துவர்கள் உள்ளனர். அதேபோன்று, பேரிடர் மேலாண்மைக்கான ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை வளப்படுத்துவது காலத்தின் தேவை. எதிர்கால தொழில்நுட்பத்துடன் உள்ளூர் திறனை இணைக்கும் போது, ​​பேரழிவை எதிர்க்கும் திசையில் நாம் சிறப்பாக செயல்பட முடியும். துருக்கி, சிரியா பூகம்பங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை முயற்சிகளின் பங்கை உலகம் அங்கீகரித்து, பாராட்டியுள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget