மேலும் அறிய

Turkiye-Syria Earthquake: பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்காக இந்தியாவை பாராட்டிய உலக நாடுகள்... பிரதமர் மோடி பெருமிதம்..!

சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரிடர் காலத்தில் உயிரிழப்பை குறைப்பதை உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகில் எங்கு பேரிடர் ஏற்பட்டாலும் அங்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு தேவையான உதவிகளை செய்து வருகிறது இந்தியா. சமீபத்தில் கூட, கடும் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த சிரியா, துருக்கிக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF), சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு தேடுதல் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 

இச்சூழலில், பேரிடர் மேலாண்மையில் முடிவுகளை எடுக்கும்போது பலதரப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைப்பதற்காக பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளம் உருவாக்கப்பட்டது.

பேரிடர் அபாயங்களை குறைக்க தேசிய தளம்:

அதன் மூன்றாவது அமர்வை, நாட்டின் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது, பேரிடர் மேலாண்மையில் வெற்றிக்கான தாரக மந்திரத்தை எடுத்துரைத்து பேசிய அவர், "சரியான நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பேரிடர் காலத்தில் உயிரிழப்பை குறைப்பதை உறுதி செய்யும்.

உள்ளார்ந்து மீண்டெழு உள்ளூரின் பங்கேற்பு அவசியம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை, பலப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, நிகழ்நேர பதிவு மற்றும் ஒவ்வொரு தெரு மற்றும் ஒவ்வொரு வீட்டையும் கண்காணித்தல் ஆகியவை பேரழிவுகளின் போது  இழப்புகளை குறைப்பதை உறுதி செய்யும்.

பேரிடர் மேலாண்மையை மனதில் வைத்து புதிய வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும். இதற்காக நாம் இரண்டு நிலைகளில் பணியாற்ற வேண்டும் .

பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

1. பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் உள்ளூர் பங்கேற்பில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டும். 2. பேரிடர்களுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மையை கவனிக்க எப்போதும் உள்ளூர் அமைப்பு இருந்திருக்கிறது. கட்ச் மக்கள் புங்கா என்றழைக்கப்படும் சேற்று வீடுகளில் வாழ்கின்றனர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்ச் ஒரு பெரிய நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது. ஆனால், இந்த புங்கா வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்றார்.

பண்டைய கால எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பேசிய அவர், "நாட்டிற்கான பேரிடர் மேலாண்மைக்கான ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. பழைய காலத்தில், எல்லா கிராமத்திலும் ஒரு ‘வைத்யராஜ்’ (மருத்துவர்) இருந்திருக்கிறார்.

இன்று, பல்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருத்துவர்கள் உள்ளனர். அதேபோன்று, பேரிடர் மேலாண்மைக்கான ஆற்றல்மிக்க அமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

புதிய தொழில்நுட்பத்துடன் உள்ளூர் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை வளப்படுத்துவது காலத்தின் தேவை. எதிர்கால தொழில்நுட்பத்துடன் உள்ளூர் திறனை இணைக்கும் போது, ​​பேரழிவை எதிர்க்கும் திசையில் நாம் சிறப்பாக செயல்பட முடியும். துருக்கி, சிரியா பூகம்பங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை முயற்சிகளின் பங்கை உலகம் அங்கீகரித்து, பாராட்டியுள்ளது" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget