13 வருட திருமண வாழ்க்கைக்கு டாட்டா! காதலனுடன் ஓடிப்போன மனைவி! இன்ஸ்டாவை பார்த்து அதிர்ச்சியான கணவர்!
13 வருடங்களாக திருமணமாகி, கணவரிடமிருந்து ஒரு மகனைப் பெற்ற ஒரு பெண், ஒரு வாரத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் காதலன் சந்தோஷுடன் ஓடிப்போய் ஒரு கோவிலில் அவரை மணந்தார்.

13 வருடங்களாக திருமணமாகி, கணவரிடமிருந்து ஒரு மகனைப் பெற்ற ஒரு பெண், ஒரு வாரத்திற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் காதலன் சந்தோஷுடன் ஓடிப்போய் ஒரு கோவிலில் அவரை மணந்தார்.
பெங்களூர் மாவட்டம் நெலமங்களா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி நேத்ராவதி. இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.
திருமணமான புதுசில் சந்தோசமாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மட்டும் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்து வந்துள்ளது.
லாரி டிரைவர் என்பதால் வாரத்தில் 3 நாட்கள் ரமேஷ் வெளியே தங்கி வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த நேத்ராவதி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்நிலையில்தான் நேத்ராவதி திடீரென ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போய்விட்டார். இதனால் கணவர் சோகத்தில் மனைவியை தேடிக்கொண்டிருந்தார்.
இந்த சமயத்தில்தான் இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று அவர் கண்ணில் தென்பட்டிருக்கிறது. அதில் தனது மனைவி மணக்கோலத்தில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதை பார்த்து அதிர்ச்சியுற்றார்.
பின்புதான் தெரிந்தது இன்ஸ்டாகிராமில் ஒரு வாரத்திற்கு முன்புதான் நேத்ராவதிக்கு சந்தோஷ் அறிமுகம் ஆகியுள்ளார். பார்த்ததும் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போனது.
நட்பாக பழகிய அவர்கள் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நேத்ராவதி காதலுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்துவிட்டார். அதன்படி கணவரையும் தனது 8 வயது மகனையும் விட்டுவிட்டு காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் நேத்ராவதி.
மேலும், தனது கணவரின் வீட்டிலிருந்து தனது பொருட்களை எடுத்துச் செல்ல போலீஸ் பாதுகாப்பு கோரி ஒரு வழக்கறிஞருடன் நெலமங்கலா காவல் நிலையத்திற்கு நேத்ராவதி சென்றார்.
இதுகுறித்து கணவர் ராமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடயே நேத்ராவதி ஓடிப்போவதற்கு முன்பு போலீசில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடித்து சித்ரவதை செய்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கணவர் ரமேஷ் கூறுகையில், “நாங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். நேத்ராவதி தனது குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்தார். எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சுமார் 15 நாட்களுக்கு முன்பு, அவர் என் மீது புகார் அளித்து என்னை வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த பிரச்சினையை தீர்க்க காவல்துறை அவருக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்தது. என் மீது புகார் அளித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். எங்கள் மகனை எங்கே வைத்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. நானும் என் பெற்றோரை இளம் வயதிலேயே இழந்து, என் அத்தை மற்றும் மாமாவால் வளர்க்கப்பட்டேன்.
அவளுடைய தந்தையின் தரப்பிலிருந்து அவளுக்கு ஒரு பங்கு விவசாய நிலம் கிடைத்தது. நான் அதை அவள் பெயரில் பதிவு செய்தேன். அவள் நிலத்தை அடமானம் வைத்து வேறொருவரை திருமணம் செய்துள்ளாள். நிலத்தின் மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம்” என்றார்.
ரமேஷின் அத்தை தாயம்மா கூறுகையில், "அவள் என் மகனை ஏமாற்றி, அவளுடைய இன்ஸ்டாகிராம் காதலனை மணந்து கொண்டாள். அது அவளுடைய விருப்பம் என்றும், எங்கள் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்றும் அவள் கூறுகிறாள். பேரன் எங்கே இருக்கிறான் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது” என்றார்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

