மேலும் அறிய

கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!

உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் மாவட்ட மக்களை ஓநாய்கள் கூட்டம் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஓநாய் தாக்கியதில் 10 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக 10 குழந்தைகள் உள்பட 11 பேரை கொன்றுகுவித்த ஓநாய்களில் ஒன்றை மட்டும் பிடிக்க முடியாமல் அம்மாநில வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

தொடரும் ஓநாய் தாக்குதல்: காடுகள் அழிக்கப்படுவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது. குறிப்பாக, வனம் சாராத செயல்களுக்காக வனப்பகுதியை பயன்படுத்தப்படுவது அங்கு வாழும் உயிரினங்களுக்கு பெரும் சிக்கலை தருகிறது.

வனப்பகுதி, விவசாய நிலமாக மாற்றப்படுவதாலும் அங்கு சாலைகள் கட்டப்படுவதாலும் அங்கு போதுமான உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனவிலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு செல்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால், மனித - வனவிலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் பஹ்ரைச் மாவட்ட மக்களை ஓநாய்கள் கூட்டம் அச்சுறுத்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஓநாய் தாக்கியதில் 10 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நேற்று, வீட்டில் தூங்கி கொண்டிருந்த 13 வயது சிறுவனை ஓநாய் தாக்கியுள்ளது.

மஹ்சி பகுதியில் உள்ள பிப்ரி மோகன் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அர்மான் அலி என்ற சிறுவனை ஓநாய் தாக்கி இருக்கிறது. தாக்குதலின் போது சிறுவனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. மேல், சிகிச்சைக்காக பஹ்ரைச்சில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

திணறும் வனத்துறை அதிகாரிகள்:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மஹ்சி தெஹ்சிலில் உள்ள சிசையா சுராமணி கிராமத்திற்குச் சென்று, அங்கு ஓநாய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தார்.

இரங்கல் தெரிவித்ததோடு, மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியளித்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள 50 கிராமங்களை ஓநாய் கூட்டம் அச்சுறுத்தி வந்தது.

வனத்துறையினர் ஐந்து ஓநாய்களை பிடித்த நிலையில், ஒன்றை மட்டும் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஓநாய் கூட்டத்தை பிடிக்க 'ஆபரேஷன் பேடியா' என்ற திட்டத்தை  உத்தரபிரதேச அரசு சமீபத்தில் தொடங்கியது. ஓநாயை பிடிக்க 165 வன அதிகாரிகளும், 18 துப்பாக்கி சுடும் வீரர்களும் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: Jani Master : பாலியல் வன்கொடுமை புகார்.. தேசிய விருதுபெற்ற ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு.. பரபர தகவல்கள்..

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.மத்திய அரசு கூறிய முக்கிய காரணங்கள்!
சபரிமலை கோவில் விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.மத்திய அரசு கூறிய முக்கிய காரணங்கள்!
Top 10 News Headlines: “தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
“தெற்கை புயலாக மாற்றாதீர்கள்“, திமுக எம்பி சல்மா கருத்தால் சர்ச்சை, ஈரான்-ட்ரம்ப் புதிய பதிவு - 11 மணி செய்திகள்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Udhayanidhi: திராவிட மாடல் ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தையும் காப்பாற்றியிருக்கிறோம்.. வில்லிவாக்கத்தில் உதயநிதி
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
Puducherry Election 2026: முதன்முறை ஓட்டுப்போடப் போறீங்களா? எப்படி வாக்களிக்க வேணடும்?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
Sai Kumar IAS: ஈபிஎஸ்-ன் முதன்மைச் செயலர், தர்மபுரி ஆட்சியர்: யார் இந்த புதிய தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ்?
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
இரவில் கார் ஓட்டுகிறீர்களா?பயணத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயங்கள்
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
ஃபார்ச்சுனருக்கு வரப்போது சவால்! அறிமுகமாகுது புதிய MG Majestor - எப்போது?
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
TTV Dinakaran: தீயசக்தி திமுக ஒரு டம்மி ஸ்டார், தமிழ்நாட்டை மீட்க அதிமுக கூட்டணியால்தான் முடியும்- டிடிவி தினகரன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
எஸ்.ஜே சூர்யா சொன்ன வார்த்தை..சிமானின் அந்த குணம்..எல்.ஐ.கே பட அனுபவங்களை பகிர்ந்த பிரதீப் ரங்கநாதன்
Embed widget