மேலும் அறிய

இந்தியா சுய சார்புடன் இல்லாவிட்டால், சீனாவைச் சார்ந்துதான் இருக்க நேரிடும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

சீனாவின் பொருள்களை நாம் புறக்கணிக்க நினைத்தாலும், நாம் பயன்படுத்தக்கூடிய மொபைல்கள் உள்பட பெரும்பான்மையான பொருள்கள் சீனாவிலிருந்து தான் வருகிறது.

சீனாவைச் சார்ந்து வாழும் நிலை அதிகரித்தால் நிச்சயம் இந்தியா அந்நாட்டிடம் தலை வணங்க வேண்டியிருக்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

 நாட்டின் 75-வது சுதந்திர தின இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் தான் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக்கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து பேசிய அவர், ”நமது நாடு எப்போது சுயசார்பு மிக்க நாடாக இருக்கிறதோ? அந்த அளவுக்கு பாதுகாப்பான நாடாக இருக்கும் என கூறினார். மேலும் அந்த விழாவில் பேசிய அவர், ”நாம் தற்போது இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதற்காக மற்ற நாடுகளைத்தான் பெரும்பாலும் சார்ந்திருக்க நேரிடுகிறது. குறிப்பாக சீனாவின் பொருள்களை நாம் புறக்கணிக்க நிலைத்தாலும், நாம் பயன்படுத்தக்கூடிய மொபைல்கள் உள்பட பெரும்பான்மையான பொருள்கள் சீனாவிலிருந்துதான் வருகிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா சுய சார்புடன் இல்லாவிட்டால், சீனாவைச் சார்ந்துதான் இருக்க நேரிடும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

குறிப்பாக நாம் எப்போதும் கூறுவது போல  சுதேசி என்றால் மற்ற வெளிநாட்டுப்பொருள்களை புறக்கணிப்பது மட்டும் அல்ல. நாம் சர்வதேச வர்த்தகத்தினை நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்காக நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

”மேலும் பொருளாதாரப் பாதுகாப்பினைச்சேர்ந்த பல்வேறு உற்பத்தியினை நாம் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிறந்த தரமான பொருள்களை உற்பத்தி செய்வதோடு, உற்பத்தி அனைத்தையும் கிராமப்புறங்களில் தான் இருக்க வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தவேண்டும். இதோடு அரசாங்கம் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைத் தயாரிக்கவும், தொழில்களை ஊக்குவிப்பதற்கானக் கொள்கைகளை வகுக்கவும் தொழில்களை முறையிடும் மற்றும் வலியுறுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நாங்கள் முழுமையான தேசியமயமாக்கலை நம்பவில்லை, ஆனால் தேசத்துக்கும் தொழில்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் உண்மை இல்லை. இவை அனைத்தும் ஒரு குடும்பமாக இணைந்து செயல்பட வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

இந்தியா சுய சார்புடன் இல்லாவிட்டால், சீனாவைச் சார்ந்துதான் இருக்க நேரிடும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

”குறிப்பாக இந்தியாவில் சிறு குறு தொழில்களை ஊக்குவிப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், நமது தேசம் சுயசார்பு மிக்கதாக இருக்க வேண்டும். எந்த அளவு சுய சார்பு மிக்க நாடாக இருக்கிறதோ அந்த அளவு பாதுகாப்பான நாடாக இருக்கும். எவ்வளவு சம்பாதிக்கிறமோ அதை வைத்து வாழ்க்கையின் தரத்தை நிர்ணயம் செய்யக் கூடாது. எவ்வளவு திருப்பி அளிக்கிறோமோ அதை வைத்தே நிர்ணயம் செய்யவேண்டும். இவைதான் வேலைவாய்ப்பை மற்றும் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும். மேலும் நமது சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவுகூர வேண்டும்” என்றும் மோகன் பகவத் பேசியுள்ளார்.

 

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget