மேலும் அறிய

திருமணத்திற்குப் பிறகு பெண் வேலை பார்ப்பதெல்லாம் விவாகரத்துக்கு காரணமில்லை: மும்பை உயர்நீதிமன்றம்

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலும் அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலும் அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தன் மனைவி தனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று மிரட்டுவதாகக் கூறி அவரிடமிருந்து விவாகரத்து கேட்டார். அதுவும் இந்தக் காரணத்துக்காக தன் மனைவி தனக்குத் தெரியாமலேயே ஒப்புதல் பெறாமலேயே கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் அந்தக் கணவர் விவாகரத்து கேட்டிருந்தார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி அடுல் சந்த்ரூகர், நீதிபதி ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13ன் படி மனைவியின் நடத்தை கொடூரச் செயல் ஆகாது என்றனர். அதாவது, ஒரு பெண் திருமணத்திற்குப் பின்னர் தனது தகுதிக்கேற்ப வேலை தேடிக் கொள்வது விவாகரத்துக்கான காரணமாகாது. விவாகரத்து கோரும் கணவர் தன் மனைவியின் செயல்பாட்டால் தன்னால் அவருடன் வாழ இயலவே இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றனர்.

மேலும், அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறி 3 ஆண்டுகளுக்குப் பின்னரே வேலையில் அமர்ந்துள்ளார். ஆதலால் அந்த காலக்கட்டத்தில் அப்பெண்ணை தன் வீட்டிற்கு திருப்பியழைத்துவர மனுதாரர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது என்று கூறி அவரது மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதேபோல் ஒரு பெண் தனக்கு வேண்டாத கர்ப்பத்தை கலைப்பது என்பதும் அவருடைய சொந்த முடிவு என்று நீதிபதிகள் கூறினர். அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் கூட ஒரு கருவை கலைக்க மனைவி தனது கணவரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முத்தாய்ப்பு தீர்ப்பு: 
அண்மையில், திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கு அனுமதி மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சியை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி "சட்டத்தின் கீழ் விதிவிலக்குகள் இருக்கும் போது, ​​மருத்துவ ஆலோசனை அனுமதிக்கும் பட்சத்தில், திருமணமாகாத பெண்களை ஏன் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க கூடாது. "கணவன்" என்பதை "பார்ட்னர்" என்று மாற்றியதால் நாடாளுமன்றத்தின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கப்பட்டவர்களில் அவர்கள் திருமணமாகாத பெண்களையும் கருத்தில் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது" என்று தெரிவித்திருந்தார். விவாகரத்து பெற்றவர்கள், கைம்பெண் அல்லது நீதிமன்றத்தின் தீர்ப்பால் பிரிந்து வாழ்பவர்கள் போன்ற திருமணமாகாத பெண்களும் தங்கள் 24 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் வகையில் தீர்ப்பை உருவாக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்க விரும்புவதும், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததும் குற்றமல்ல கொடூரமான செயலு அல்ல. அவையெல்லாம் விவாகரத்துக்குப் போதிய காரணமே இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget