மேலும் அறிய

Sedition 124A: தேச துரோக சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?

இந்திய தண்டனை சட்டத்தின் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் ஐபிசி பிரிவு 124 ஏ சேர்க்கப்பட்டது.

இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள தேச துரோக பிரிவை மீண்டும் மறுபரிசீலனை செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இனிமேல் இந்தப் பிரிவின் கீழ் மத்திய மாநில அரசுகள் வழக்குகள் பதிவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில் ஐபிசி பிரிவு 124 ஏ எப்படி வந்தது? இதுவரை உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?

ஐபிசி பிரிவு 124 ஏ வந்தது எப்படி?

இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 1860ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இயற்றப்பட்டது. அப்போது தாமஸ் மெக்காலே இதை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தச் சட்டத்தில் பிரிவு 124 ஏ தேச துரோகம் என்பதை ஆங்கிலேய அரசு சேர்த்திருந்தது. அதாவது ஆங்கிலேயே அரசிற்கு எதிராக ஒருவர் தவறாக பேசினாலோ அல்லது புரட்சியை துண்டும் வகையில் செயல்பட்டாலோ இதை பயன்படுத்த ஆங்கில அரசு முடிவு செய்தது. இதன் காரணமாக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்திய சுதந்திரம் அடைந்த பிறகும் இந்தப் பிரிவு தொடர்ந்து ஐபிசியில் இடம்பெற்று இருந்தது. இந்தப் பிரிவை சுதந்திரத்திற்கு பிறகும் பல முறை இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்த ஆங்கிலேய நாட்டில் இச்சட்டம் முற்றிலும் இல்லை. இங்கிலாந்தில் இந்த தேச துரோக சட்டப்பிரிவு இல்லை. 


Sedition 124A: தேச துரோக சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டது ஏன்? உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?

பிரிவு 124 ஏ தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?

  • 1962ஆம் ஆண்டு கேதார்நாத் vs பீகார் வழக்கில் உச்சநீதிமன்றம், “வன்முறை தூண்டும் வகையில் ஒருவரின் பேச்சு இருந்தால் அப்போது தேச துரோக வழக்கு பதிவிடலாம்” எனத் தெரிவித்திருந்தது. 
  • 1982ஆம் ஆண்டு அலரி  vs கேரளா வழக்கில் உச்சநீதிமன்றம்,”அரசுக்கு எதிரான கருத்துகள் ஒருபோதும் தேச துரோக வழக்காக கருதப்படாது” எனக் கூறியிருந்தது. 
  • 1995ஆம் ஆண்டு பல்வான் சிங் வழக்கில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்புவது தேச துரோக வழக்கில் வராது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 
  • இவை தவிர மக்களாட்சியில் அரசுக்கு எதிரான கருத்து என்பது முக்கியமான ஒன்று என்ற பார்வையும் உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது. 

தேசிய குற்ற ஆவண காப்பகங்களில் 2018 தரவுகளின் படி 2016ஆம் ஆண்டு 35 தேச துரோக வழக்குகள் பதிவாகியிருந்தன. அந்த வழக்குகளின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டு 70 ஆக உயர்ந்திருந்தது. மேலும் அடிக்கடி அரசுகள் தங்களுக்கு எதிரான குரல்களை தேச துரோகம் என்ற வழக்கில்  கொண்டு வந்து சிதைத்து விடுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

தவறாக பேசி வன்முறையை துண்டுதல் போன்றவற்றிற்கு ஏற்கெனவே ஐபிசி பிரிவு 153 ஏ உள்ளது. அப்படி இருக்கும் போது 124ஏ என்பது தேவையற்ற ஒன்று சில சட்ட வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆகவே மத்திய அரசு இந்தப் பிரிவை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget