மேலும் அறிய

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.. போலீஸ் தயங்குறாங்க - மேற்கு வங்க ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாகவும் அந்த மாநில ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கடந்தாண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை:

இந்த சூழலில், கடந்த 10ம் தேதி மேற்கு வங்கத்தின் துர்காபூரில் படித்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செயயப்பட்டார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:

இந்த நிலையில், அந்த மாநில ஆளுநர் சிவி ஆனந்த போஸ் மிகுந்த அதிருப்தியை இந்த விவகாரத்தில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். 

இதனால், போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் பாலியல் குற்றங்களைப் பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. இந்த சம்பவங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது.

சமரசம் கூடாது:

மேற்கு வங்கத்தில் எந்த நேரத்திலும், எந்த நாளிலும் பெண்கள் சுதந்திரமாக வெளியே நடமாடக்கூடிய வகையில் மாநிலத்தை மாற்றி அமைக்க வேண்டும்.துர்காபூர் சம்பவத்தில் மம்தா பானர்ஜியின் கருத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. 5 ஆண்டுக்கு ஒரு முறை மாநிலத்தில் அரசு மாறும். ஆனால், சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்யவே கூடாது.

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதே காவல்துறையின் முதன்மையான கடமை. ஆனால், மேற்கு வங்க காவல்துறையில் ஒரு தரப்பினர் ஊழல்வாதிகளாகவும், அரசியல் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும் உள்ளனர். இந்த அதிகாரிகளை அகற்ற வேண்டும். இது ஆளும் அரசின் பொறுப்பு. காவல்துறையினர் ஆளுங்கட்சியின் குரலாக இருக்கக்கூடாது. நடுநிலையுடன் இருக்க வேண்டும்.

அச்சுறுத்தல்:

இந்த நாட்டில் அனைவருக்கும் வாழ உரிமை உள்ளது. இதை நம் அரசியலமைப்பு உறுதி செய்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் குற்றங்களால் இந்த உரிமை பாதுகாக்கப்படவில்லை. இது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மட்டுமின்றி அரசியலமைப்பிற்கே அச்சுறுத்தல். 

இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஆளுநருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சம்பவம் மேற்கு வங்கம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெண்கள் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்தாண்டு அந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் திரிணாமுல் அரசுக்கு பெரும் பின்னடைவை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

குஜராத்தில் மாட்டு சாணம் புரட்சி: பெட்ரோலை விட ரூ.20 குறைந்து எரிபொருள்!
குஜராத்தில் மாட்டு சாணம் புரட்சி: பெட்ரோலை விட ரூ.20 குறைந்து எரிபொருள்!
வருமான வரி தாக்கல்: AI-யை நம்பினால் நோட்டீஸ் உறுதி!விவரம் இதோ..
வருமான வரி தாக்கல்: AI-யை நம்பினால் நோட்டீஸ் உறுதி!விவரம் இதோ..
உள்நாட்டு விவசாய எதிர்காலத்தை மாற்றும் இந்திய-இஸ்ரேல் தொழில்நுட்பம் - விவரிக்கும் அதிகாரி
உள்நாட்டு விவசாய எதிர்காலத்தை மாற்றும் இந்திய-இஸ்ரேல் தொழில்நுட்பம் - விவரிக்கும் அதிகாரி
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண இழப்பு, டேட்டா திருட்டை தடுக்க உடனடி பாதுகாப்பு வழிகள்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Embed widget