மேலும் அறிய

Weather Update: கேரளாவில் நாளையும், நாளை மறுநாளும் ஆரஞ்ச் அலர்ட்.. அப்படியென்றால் என்ன?

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், கேரளாவில் உள்ள 6 மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, கேரளாவில் உள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு மற்றும் இடுக்கியில் அதீத கனமழை வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. கண்ணூர் மற்றும் கோழிக்கோடில் வரும் சனிக்கிழமையிலும்(நாளை) கோட்டயம் மற்றும் பத்தினம் திட்டாவில் நாளை மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Weather Update: கேரளாவில் நாளையும், நாளை மறுநாளும் ஆரஞ்ச் அலர்ட்.. அப்படியென்றால் என்ன?

வங்கக்கடலில் மேற்கு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை கேரளாவில் மழை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்புடுகிறது. இந்த இரு நாட்களில் அரபிக்கடலில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியில் 40-50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுமட்டுமின்றி, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கோழாவில் 13 செ.மீட்டர் மழையும், ஆலப்புழாவில் உள்ள செர்தலாவில் 12 செ.மீட்டர் மழையும், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா மற்றும கீரம்பராவில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 மணிநேரத்தில் 6 செ.மீட்டர் மழை முதல் 20 செ.மீட்டர் மழை வரை பதிவாகும் பகுதிகளுக்குதான் ஆரஞ்ச் நிற அலர்ட் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படும். 6 செ.மீட்டர் முதல் 11 செ.மீட்டர் மழை வரை ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Weather Update: கேரளாவில் நாளையும், நாளை மறுநாளும் ஆரஞ்ச் அலர்ட்.. அப்படியென்றால் என்ன?

கேரளாவில் கடந்த ஒரு மாதமாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 32 ஆயிரம் நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கேரளாவில் மழை பாதிப்பும் ஏற்பட்டுள்ளதால், கொரோனா தொற்றுடன் பல்வேறு வைரஸ் காய்ச்சல் பாதிப்புகளும் ஏற்படும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வரும் கேரளாவில் தற்போது ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருப்பது அந்த மாநில மக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரஞ்ச் அலர்ட் காரணமாக சுகாதாரத்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் இருக்குமாறு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget