மேலும் அறிய

கிராம தலைவருக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்த இளைஞர் கொடூர கொலை.. திடுக் பின்னணி..!

நில அபகரிப்பு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கிராமத் தலைவர் தேவேந்திர சிங்குக்கு எதிராக தேவ்ஜீத் சிங் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்.

உத்தர பிரதேசம் அலிகாரில் இக்லாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிராம தலைவருக்கு எதிரான தகவலை கோரி இருந்த 32 வயது நபரை கொலை செய்தது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் தேவ்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கோரை கிராமத்தில்  இன்டர்நெட் மையத்தை நடத்தி வந்துள்ளார்.

நில அபகரிப்பு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கிராமத் தலைவர் தேவேந்திர சிங்குக்கு எதிராக தேவ்ஜீத் சிங் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கோரியிருந்தார்.

இதுகுறித்து இக்லாஸ் காவல் நிலைய அதிகாரி விஜய் சிங் கூறுகையில், "கிராமத்தில் தரமற்ற வளர்ச்சிப் பணிகள் இருப்பதாக தேவ்ஜீத் சிங் குற்றம் சாட்டினார்.

ஞாயிற்றுக்கிழமை அன்று கிராமத் தலைவர் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கம்புகள் மற்றும் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் தேவ்ஜீத் சிங் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர். 

அவரது சகோதரர் சுரேந்திர சிங்கும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

தேவ்ஜீத் சிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராமத்தலைவர் தேவேந்திர சிங், அவரது மகன் கார்த்திக் மற்றும் ஆறு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 (கொலை), 147 (கலவரம்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, குற்றச் சதியில்  ஈடுபட்டதற்காக லுவ்குஷ் மற்றும் தினேஷ் ஆகியோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டன. ஹர்வீர் ஒருவருடன் லுவ்குஷ் மற்றும் தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது" என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலக அளவில், கொலை சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆர்பி) வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த 2001 முதல் 2007 வரை நடந்த குற்றசம்பவங்கள் தொடர்பாக என்சிஆர்பி புள்ளி விவரத்தில், கடந்த 2001 ல் 36,202 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இது, 2017 ல் 28,653 ஆக சரிந்துள்ளது. இது 21 சதவீதம் குறைவாகும். 

இதே காலகட்டத்தில், தனி நபர் விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவங்கள் 4.3 சதவீதமும், சொத்து விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 12 சதவீதமும் குறைந்துள்ளது. ஆனால், காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவங்கள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget