மேலும் அறிய

கெஜ்ரிவால் விவகாரத்தில் தொடர் அழுத்தம்! அமெரிக்க, ஜெர்மனி நாடுகளுக்கு குடியரசு துணை தலைவர் பதிலடி!

சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தரத் தேவையில்லை என குடியரசு துணை தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.

அசாதாரண அரசியல் சூழல்:

குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் வரிசையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தவிர்த்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது, எதிர்க்கட்சிகள் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என விமர்சனம் எழுந்து வருகிறது.

உள்நாட்டை தாண்டி சர்வதேச நாடுகளிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டது. இதற்கு இந்தியாவும் கடும் எதிர்வினையாற்றி இருந்தது.

குடியரசு துணை தலைவர் பரபர கருத்து:

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பதிலடி அளித்துள்ளார். இந்தியா ஒரு தனித்துவமான ஜனநாயக நாடு என்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தர தேவையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.

நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இதை எந்த ஒரு தனிநபராலும் அல்லது எந்த குழுவாலும் சமரசம் செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்தியாவில் புதிய நடைமுறை. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தவர்கள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததை மறைமுகமாக விமர்சித்த குடியரசு துணை தலைவர், "நாம் என்ன பார்க்கிறோம்? சட்டம் அதன் போக்கை எடுக்கும் தருணத்தில், அவர்கள் தெருக்களில் இறங்குகிறார்கள், விவாதங்களில் கத்துகிறார்கள், மனித உரிமைகள் என சொல்லிக் கொண்டு மோசமான குற்றத்தை மறைக்கிறார்கள். இது நம் கண் முன்நடக்கிறது.

சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும்போது, ஒரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது ஒரு அமைப்போ வீதியில் இறங்குவது என்ன நியாயம்?" என தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Rasipalan : துலாமுக்கு பெருமை, விருச்சிகத்துக்கு நன்மை : இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasipalan : துலாமுக்கு பெருமை, விருச்சிகத்துக்கு நன்மை : இன்றைய ராசிபலன்கள் இதோ!
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICEVeeralakshmi on Vijay Dhanush : ”விஜய், தனுஷ், த்ரிஷா..உடனே டெஸ்ட் எடுங்க”வீரலட்சுமி பரபரப்பு புகார்Akshay kumar first vote : 56 வயதான அக்‌ஷய் குமார்! முதல்முறையாக வாக்களித்தார் காரணம் என்ன?Salem differently abled : மூன்று சக்கர வாகனத்தில் உணவு டெலிவரி! அசத்தும் மாற்றுத்திறனாளி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Lok Sabha Election 2024 Phase 5 Voting: 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகளில் 60% வாக்குப்பதிவு, மேற்குவங்கத்தில் உச்சம்
Rasipalan : துலாமுக்கு பெருமை, விருச்சிகத்துக்கு நன்மை : இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasipalan : துலாமுக்கு பெருமை, விருச்சிகத்துக்கு நன்மை : இன்றைய ராசிபலன்கள் இதோ!
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
HBD Mohanlal: நாடு இழந்த மாவீரன்! நடிப்பிற்காக மோகன்லால் செய்த தியாகம் - என்ன தெரியுமா?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Iran President Death Impact: ஈரான் அதிபர் மறைவு: உயரும் தங்கம், கச்சா எண்ணெய் விலை; இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR 
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
MS Dhoni: ”எனக்கு இரண்டு மாதங்கள் டைம் வேணும்” - ஓய்வு குறித்த சிந்தனையில் தல தோனி!
Watch Video: காதலியுடன் பைக்கில் மஜாவாக வலம் வந்த காதலன்: அலேக்காக தூக்கிய போலீஸ்! காரணம் என்ன?
Watch Video: காதலியுடன் பைக்கில் மஜாவாக வலம் வந்த காதலன்: அலேக்காக தூக்கிய போலீஸ்! காரணம் என்ன?
Fact Check: ஆந்திராவை தட்டித்தூக்கும் பாஜக கூட்டணி.. பரப்பப்படும் கருத்துக்கணிப்பு உண்மையா?
ஆந்திராவை தட்டித்தூக்கும் பாஜக கூட்டணி.. பரப்பப்படும் கருத்துக்கணிப்பு உண்மையா?
Embed widget