மேலும் அறிய

"ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செய்றோம் சொன்ன மட்டும் பத்தாது" குடியரசுத் துணைத் தலைவர்!

கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வெறும் உதட்டளவில் மட்டும் சொல்வதை விட கணிசமான பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பு கணிசமானதாக இருக்க வேண்டுமே, அல்லாமல் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களை வெறுமனே அர்ப்பணிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், எந்தவொரு ஆராய்ச்சியின் முக்கியத்துவமும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

"நிதி ஆதாரங்கள் உறுதியளிக்கப்படுகின்றன என்பதற்காக, நாம் பெருமைப்பட முடியாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு என்பது உறுதியான விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

"சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்"

டெல்லி, பூசா சாலையில் இன்று நடைபெற்ற 83-வது சிஎஸ்ஐஆர் நிறுவன தின கொண்டாட்டங்களில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

மென்மையான ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைந்தவை என்று தன்கர் கூறினார். "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது. முதலீடு என்பது வளர்ச்சிக்கானது. முதலீடு என்பது நிலைத்தன்மைக்கானது" என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலை சுட்டிக்காட்டிய தன்கர், அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்தார்.

"வெறும் உதட்டளவில் மட்டும் பேசுக்கூடாது"

"கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து அரசு மிகவும் தீவிரமாக இருப்பது உட்பட பல வழிகளில் இது அதிகரித்துள்ளது" என அவர் கூறினார்.

இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தன்கர் பாராட்டு தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்த தன்கர், "நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், "ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன.

நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.

இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த தன்கர், வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Embed widget