மேலும் அறிய

"ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செய்றோம் சொன்ன மட்டும் பத்தாது" குடியரசுத் துணைத் தலைவர்!

கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வெறும் உதட்டளவில் மட்டும் சொல்வதை விட கணிசமான பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பு கணிசமானதாக இருக்க வேண்டுமே, அல்லாமல் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களை வெறுமனே அர்ப்பணிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், எந்தவொரு ஆராய்ச்சியின் முக்கியத்துவமும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

"நிதி ஆதாரங்கள் உறுதியளிக்கப்படுகின்றன என்பதற்காக, நாம் பெருமைப்பட முடியாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு என்பது உறுதியான விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

"சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்"

டெல்லி, பூசா சாலையில் இன்று நடைபெற்ற 83-வது சிஎஸ்ஐஆர் நிறுவன தின கொண்டாட்டங்களில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

மென்மையான ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைந்தவை என்று தன்கர் கூறினார். "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது. முதலீடு என்பது வளர்ச்சிக்கானது. முதலீடு என்பது நிலைத்தன்மைக்கானது" என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலை சுட்டிக்காட்டிய தன்கர், அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்தார்.

"வெறும் உதட்டளவில் மட்டும் பேசுக்கூடாது"

"கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து அரசு மிகவும் தீவிரமாக இருப்பது உட்பட பல வழிகளில் இது அதிகரித்துள்ளது" என அவர் கூறினார்.

இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தன்கர் பாராட்டு தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்த தன்கர், "நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், "ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன.

நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.

இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த தன்கர், வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Quarterly Exam Holiday: காலாண்டு விடுமுறை; ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்த பள்ளிக் கல்வித்துறை!
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
TNPSC Group 2: குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு, முதன்மைத் தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 2: குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவு, முதன்மைத் தேர்வு எப்போது?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Abp Nadu Exclusive: ஆதவ் அர்ஜுன் கருத்து தனிப்பட்ட கருத்து.. பின்னணியில் பாஜகவா ? - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி 
ஆதவ் அர்ஜுன் கருத்து தனிப்பட்ட கருத்து.. பின்னணியில் பாஜகவா ? - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி 
Shakib Al Hasan Retirement:ரசிகர்கள் ஷாக்.. திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
Shakib Al Hasan Retirement:ரசிகர்கள் ஷாக்.. திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி - நல்ல மகசூல், வருவாய் ஈட்டும் விவசாயிகள்
ஒரே கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் சாமை சாகுபடி - நல்ல மகசூல், வருவாய் ஈட்டும் விவசாயிகள்
Embed widget