மேலும் அறிய

"ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செய்றோம் சொன்ன மட்டும் பத்தாது" குடியரசுத் துணைத் தலைவர்!

கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வெறும் உதட்டளவில் மட்டும் சொல்வதை விட கணிசமான பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்களிப்பு கணிசமானதாக இருக்க வேண்டுமே, அல்லாமல் மேலோட்டமாக இருக்கக்கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களை வெறுமனே அர்ப்பணிப்பது மட்டும் போதாது என்று கூறிய அவர், எந்தவொரு ஆராய்ச்சியின் முக்கியத்துவமும் உறுதியான விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

"நிதி ஆதாரங்கள் உறுதியளிக்கப்படுகின்றன என்பதற்காக, நாம் பெருமைப்பட முடியாது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு என்பது உறுதியான விளைவுகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

"சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்"

டெல்லி, பூசா சாலையில் இன்று நடைபெற்ற 83-வது சிஎஸ்ஐஆர் நிறுவன தின கொண்டாட்டங்களில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், தற்கால சூழ்நிலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்த்தார்.

மென்மையான ராஜதந்திரம் மற்றும் தேசிய பாதுகாப்புடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைந்தவை என்று தன்கர் கூறினார். "ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடு நீடிக்கும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்த நாட்களில் பாதுகாப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

எனவே முதலீடு என்பது நாட்டுக்கானது. முதலீடு என்பது வளர்ச்சிக்கானது. முதலீடு என்பது நிலைத்தன்மைக்கானது" என்று அவர் வலியுறுத்தினார். தற்போதைய சூழலை சுட்டிக்காட்டிய தன்கர், அறிவியல் சமூகத்தினருக்கான அங்கீகாரம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது குறித்து திருப்தி தெரிவித்தார்.

"வெறும் உதட்டளவில் மட்டும் பேசுக்கூடாது"

"கடந்த சில ஆண்டுகளில் அறிவியல் சமூகத்திற்கான அங்கீகாரம் அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது குறித்து அரசு மிகவும் தீவிரமாக இருப்பது உட்பட பல வழிகளில் இது அதிகரித்துள்ளது" என அவர் கூறினார்.

இந்திய விஞ்ஞானிகளின் ஆற்றலின் மீது பிரதமர் கொண்டுள்ள மரியாதை மற்றும் நம்பிக்கைக்கு தன்கர் பாராட்டு தெரிவித்தார். சுற்றுச்சூழல் அமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தை அங்கீகரித்த தன்கர், "நமது விஞ்ஞானிகள் தங்களது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், விரிவுபடுத்தவும், அவர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது புதுமையான திறன்களை வெளிக்கொணர்வதன் மூலம் நாட்டிற்கு பங்களிக்கவும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு தற்போது உருவாகி வருகிறது" என்று குறிப்பிட்டார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுமாறு கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்த அவர், "ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்திய நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன.

நமது நாட்டின் அளவு, அதன் திறன், அதன் நிலை மற்றும் அதன் வளர்ச்சிப் பாதை ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட முன்வர வேண்டும்" என்று பிரதமர் கூறினார்.

இந்திய கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தற்போதைய அணுகுமுறை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த தன்கர், வெறும் உதட்டளவில் மட்டும் பேசுவதை விட கணிசமான பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Top 10 News Headlines: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை.. பிரதமர் மோடியின் சாதனை.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 4 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
உடலில் 51 காயங்கள்,. சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை! ஒன்றரை வயது குழந்தை உயிரப்பு!..
Central Minister on Aviation: 2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்
2 ஆண்டுகளில் மேலும் பல விமான நிறுவனங்கள் வர வாய்ப்பு; ஏபிபி மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Chennai Power Cut: சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னைல 05.06.2026 எங்கெங்க மின்சார தடை ஏற்படப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Embed widget