மேலும் அறிய

Watch Video : அதிவேக ’வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம்.. 180 கி.மீ வேகத்தைக் கடந்து சாதனை! வாவ் வீடியோ

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ளது.

'ரயில் 18' என அழைக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில், முன்னதாக  சோதனை ஓட்டத்தின்போது 180 கிமீ வேகத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ள நிலையில், இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் தயாரிக்கப்பட்டது

சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த 3ஆவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் முன்னதாக சென்னையில் நடைபெற்றது. இந்த ரயில் சென்னையிலிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை பயணத்தை முடித்தது.

தற்போது, டெல்லியில் இருந்து கத்ரா மற்றும் டெல்லியில் இருந்து வாரணாசி வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்

ரெயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாகக் கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் 2019ஆம் ஆண்டு தன் முதல் சேவையைத் தொடங்கியது.

வந்தே பாரத் ரயில் 200 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொத்தம் 16 கோச்சுகள் இந்த ரயிலில் உள்ளன. சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் அதே எண்ணிக்கையிலான பயணிகளை (1100க்கும் மேற்பட்ட பயணிகள்) இதில் ஏற்றிச் செல்ல முடியும்.

வந்தே பாரத் இரு முனைகளிலும் ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் கேபின்களைக் கொண்டுள்ளது.

புதிய வந்தே பாரதத் ரயிலில் பயணிகளின் சாய்வு இருக்கையில் புஷ்பேக் வசதி உள்ளது.  ரயிலில் பயணிகள் புகைபிடிக்கும் போது அலாரம் ஒலிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ஓட்டுநருடன் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு மைக்குகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ரயிலில் திடீரென தீப்பற்றினால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எளிதாகத் திறக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.

நிதி அமைச்சர் அறிவிப்பு

முன்னதாக 2022 - 23ஆம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் 10 நிமிடத்தில் கேஸ் சிலிண்டர் டெலிவரி! இனி கவலை இல்லை!
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
10 கிலோ எல்பிஜி சிலிண்டர்: இனி சுமை இல்லை! வணிகர்கள், வீடுகளுக்கு புதிய வசதி.
Chennai-Bengaluru Bullet Train: மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில் பாதை... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
மணிக்கு 320 கி.மீ வேகம்! தமிழ்நாட்டின் முதல் புல்லட் ரயில்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget