மேலும் அறிய

Watch Video : அதிவேக ’வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம்.. 180 கி.மீ வேகத்தைக் கடந்து சாதனை! வாவ் வீடியோ

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ளது.

'ரயில் 18' என அழைக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில், முன்னதாக  சோதனை ஓட்டத்தின்போது 180 கிமீ வேகத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ள நிலையில், இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் தயாரிக்கப்பட்டது

சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த 3ஆவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் முன்னதாக சென்னையில் நடைபெற்றது. இந்த ரயில் சென்னையிலிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை பயணத்தை முடித்தது.

தற்போது, டெல்லியில் இருந்து கத்ரா மற்றும் டெல்லியில் இருந்து வாரணாசி வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்

ரெயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாகக் கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் 2019ஆம் ஆண்டு தன் முதல் சேவையைத் தொடங்கியது.

வந்தே பாரத் ரயில் 200 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொத்தம் 16 கோச்சுகள் இந்த ரயிலில் உள்ளன. சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் அதே எண்ணிக்கையிலான பயணிகளை (1100க்கும் மேற்பட்ட பயணிகள்) இதில் ஏற்றிச் செல்ல முடியும்.

வந்தே பாரத் இரு முனைகளிலும் ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் கேபின்களைக் கொண்டுள்ளது.

புதிய வந்தே பாரதத் ரயிலில் பயணிகளின் சாய்வு இருக்கையில் புஷ்பேக் வசதி உள்ளது.  ரயிலில் பயணிகள் புகைபிடிக்கும் போது அலாரம் ஒலிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ஓட்டுநருடன் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு மைக்குகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ரயிலில் திடீரென தீப்பற்றினால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எளிதாகத் திறக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.

நிதி அமைச்சர் அறிவிப்பு

முன்னதாக 2022 - 23ஆம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget