மேலும் அறிய

Watch Video : அதிவேக ’வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம்.. 180 கி.மீ வேகத்தைக் கடந்து சாதனை! வாவ் வீடியோ

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ளது.

'ரயில் 18' என அழைக்கப்படும் இந்தியாவின் அதிவேக ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில், முன்னதாக  சோதனை ஓட்டத்தின்போது 180 கிமீ வேகத்தைக் கடந்து சாதனை புரிந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கோட்டா-நாக்டாவில் 225 கிமீ பகுதிக்கான இரண்டாம் கட்ட சோதனை ஓட்டத்தின் போது  இந்த சாதனையை வந்தே பாரத் புரிந்துள்ள நிலையில், இது குறித்து அஷ்வினி வைஷ்ணவ் முன்னதாக தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னையில் தயாரிக்கப்பட்டது

சென்னை ஐசிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த 3ஆவது வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் முன்னதாக சென்னையில் நடைபெற்றது. இந்த ரயில் சென்னையிலிருந்து பாடி வரை வெற்றிகரமாக சோதனை பயணத்தை முடித்தது.

தற்போது, டெல்லியில் இருந்து கத்ரா மற்றும் டெல்லியில் இருந்து வாரணாசி வரை என இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாட்டத்தின்போது நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

வந்தே பாரத் ரயிலின் சிறப்புகள்

ரெயில்-18 என்று பெயரிடப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டது. இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாகக் கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் 2019ஆம் ஆண்டு தன் முதல் சேவையைத் தொடங்கியது.

வந்தே பாரத் ரயில் 200 கிமீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மொத்தம் 16 கோச்சுகள் இந்த ரயிலில் உள்ளன. சதாப்தி எக்ஸ்பிரஸில் பயணிக்கும் அதே எண்ணிக்கையிலான பயணிகளை (1100க்கும் மேற்பட்ட பயணிகள்) இதில் ஏற்றிச் செல்ல முடியும்.

வந்தே பாரத் இரு முனைகளிலும் ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்ட ஓட்டுநர் கேபின்களைக் கொண்டுள்ளது.

புதிய வந்தே பாரதத் ரயிலில் பயணிகளின் சாய்வு இருக்கையில் புஷ்பேக் வசதி உள்ளது.  ரயிலில் பயணிகள் புகைபிடிக்கும் போது அலாரம் ஒலிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் ஓட்டுநருடன் பேசுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு மைக்குகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ரயிலில் திடீரென தீப்பற்றினால் கதவுகள் மற்றும் ஜன்னல்களை எளிதாகத் திறக்கும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதிகளும் உள்ளன.

நிதி அமைச்சர் அறிவிப்பு

முன்னதாக 2022 - 23ஆம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikatan: அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
Vikatan: அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
Watch Video: ஸ்டைலா, கெத்தா..! மேடையிலேயே மணமகளை தூக்க முயன்ற காதலி - எதிர்பாராத ட்விஸ்ட்! சுத்து போட்ட குடும்பம்
Watch Video: ஸ்டைலா, கெத்தா..! மேடையிலேயே மணமகளை தூக்க முயன்ற காதலி - எதிர்பாராத ட்விஸ்ட்! சுத்து போட்ட குடும்பம்
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Students with PMK Flag : ஆண்டு விழாவா?கட்சிக்கூட்டமா?பாமக துண்டுடன் மாணவர்கள் சாதி பாடலுக்கு நடனம்KT Rajendra Balaji Angry : ’’ஏய்..ஆள் பாத்து போடுவியா டா’’நிர்வாகியை அறைந்த ராஜேந்திர பாலாஜி மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை!TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikatan: அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
Vikatan: அதிரடி காட்டிய நீதிமன்றம்; ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவு!
South Korea: ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
ட்ரெய்னிங்னா அப்படி ஓரமா போய் பாம் போட வேண்டியதுதான, இப்படியா ஊருக்குள்ள போடுறது.?!
Watch Video: ஸ்டைலா, கெத்தா..! மேடையிலேயே மணமகளை தூக்க முயன்ற காதலி - எதிர்பாராத ட்விஸ்ட்! சுத்து போட்ட குடும்பம்
Watch Video: ஸ்டைலா, கெத்தா..! மேடையிலேயே மணமகளை தூக்க முயன்ற காதலி - எதிர்பாராத ட்விஸ்ட்! சுத்து போட்ட குடும்பம்
Ilayaraja on Symphony:
"Incredible இந்தியா மாதிரி நான் Incredible இளையராஜா".! லண்டன் புறப்பட்டபோது அசத்தல் பேட்டி...
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
NEET UG Registration: அலர்ட் மாணவர்களே… நீட் தேர்வு விண்ணப்பிச்சாச்சா? நாளையே கடைசி- இதோ Guide!
Anna Nagar Tower Park: புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
புதுப்பொலிவு பெறும் அண்ணா நகர் டவர் பார்க்... யப்பா.. இவ்ளோ வசதிகள் வரப்போகுதா.?
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
EAM Jaishankar: ”திருடப்பட்ட காஷ்மீர், இந்தியா மீதான ட்ரம்பின் வரி திட்டம்” - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?
Embed widget