மேலும் அறிய

Rishabh Pant: கார் ஓட்டும்போது போதையில் இருந்தாரா ரிஷப்பண்ட்...? காவல்துறை பதில்..!

கார் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் கார் ஓட்டும்போது போதையில் இருந்தாரா? என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.

கார் விபத்தில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் அவரது காரை போதையில் இயக்கவில்லை. அதுபோல் அவர் அந்த காரை வேகமாகவும் இயக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மது அருந்தினாரா..? அதிவேகமாக சென்றாரா..?

இது குறித்து ஹரித்வார் சீனியர் எஸ்எஸ்பி, அஜய் சிங் கூறுகையில், நாங்கள் விபத்து நடந்த பகுதி வரையில் இருந்த 10 ஸ்பீட் கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில் ஒன்றில் கூட ரிஷப் பண்ட் கார் அதிவேகமாக சென்றதற்கான அடையாளம் இல்லை.

அவரது கார் சீராக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் தான் சென்றுள்ளது. எங்கள் தொழில்நுட்பக் குழுவினரும் நிகழ்விடத்தைப் பார்த்து ரிஷப் பந்த் காரில் வேகமாக செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல் அவர் பயணத்தின் போது மது அருந்தவில்லை என்பதும் மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் மது அருந்தியிருந்தால் அவரால் அந்த அதிர்ச்சியான நேரத்தில் காரில் இருந்து வெளிவந்திருக்க முடியாது என்றார்.

உத்தர்காண்ட் போலீஸ் டிஜிபி கூறுகையில், ஒருவேளை ரிஷப்பண்ட் பயணக் களப்பில் கண் அசந்து விபத்து நேர்ந்திருக்கலாம். அதற்குத் தான் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். அதேபோல் விபத்திற்கு பின்னர் சுய நினைவோடு போலீஸ் விசாரணையில் பதிலளித்த ரிஷப்பண்டும், தூக்க கலக்கத்தில் காரின் மீதான கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறியிருந்தார்.

விபத்து நடந்தது எப்படி?

25 வயதான கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்றிரவு உத்தராகண்டில் உள்ள ரூர்க்கி பகுதிக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தனியாக புறப்பட்டுச் சென்றார். தனது தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பதற்கு முன்கூட்டியே தகவல் ஏதும் கொடுக்காமல் கிளம்பி உள்ளார். காலை 5.30 மணி அளவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் சென்ற போது சாலை தடுப்பின் மீது கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கார் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை அந்த வழியாக சென்ற ஹரியானா போக்குவரத்து கழக ஒட்டுநர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரும் அவருடன் பணியாற்றிய ஊழியரும் விரைந்து செயல்பட்டு காரில் படுகாயங்களுடன் சிக்கியிருந்த ரிஷப்பண்டை மீட்டு அருகில் உள்ள சக்சாம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையில் ரிஷப்பண்ட்:

ரிஷப் பந்தின் நெற்றியில் இரண்டு இடங்களில் கீறல் ஏற்பட்டுள்ளது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. வலது மணிக்கட்டு, கணுக்கால், கால்விரலில் காயமும் முதுகில் சிராய்ப்பும் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதேவேளையில் தீக்காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ரிஷப் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் ரிஷப்பண்ட் மது அருந்திவிட்டு தனது காரை ஓட்டினார். அவர் அளவுக்கு அதிகமான வேகத்தில் கார் ஓட்டினார் என்றெல்லாம் எழுந்த தகவல்களை அடுத்து, ரிஷப் பந்த் அவரது காரை போதையில் இயக்கவில்லை. அதுபோல் அவர் அந்த காரை வேகமாகவும் இயக்கவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
WhatsApp Meta AI 3D: வாட்சப்பில் ஒரே டெக்ஸட்தான்! உடனே உருவாகும் 3D இமேஜ்! எப்படி தெரியுமா?
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
கோவில்பட்டியில் ‌ஹாக்கி கோல் கீப்பர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் - பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
Watch Video: சொந்த ஊருக்கு சென்ற பும் பும் பும்ரா! உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்;  அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுக்கட்டுகள்; அள்ளிச் சென்ற பொதுமக்கள்! நடந்தது என்ன?
Embed widget