மேலும் அறிய

எருமைக்காக 2வது திருமணம், பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மணமகள் - மருமகளை போட்டுக் கொடுத்த மாமனார்

UP Crime: எருமைக்காக சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பெண்ணை உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

UP Crime: எருமைக்காக சட்டவிரோதமாக இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற, மணப்பெண் சிக்கியது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபமான கல்லூரி:

உத்தரபிரதேச மாநிலம் ஹசன்பூரில் உள்ள ஒரு கல்லூரி, ஞாயிற்றுக்கிழமை ஒரு பிரமண்ட திருமண விழாவிற்காக திருமண மண்டபமாக மாற்றப்பட்டு இருந்தது. 300க்கும் மேற்பட்ட மணமக்கள் தங்களது குடும்பத்தினருடன், சடங்குகளுக்குத் தயாராக இருந்தனர். உத்தரபிரதேச அரசின் வெகுஜன திருமணம் திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி, திருமணம் நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. மண்டபத்திற்கு வந்த ஒருவர், தனது மருமகள் அந்த கூட்டத்தில் மணமகளாக இருப்பதாகவும், சட்டவிரோதமாக அவர் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சிக்கிய பலே மணமகள்:

இதையடுத்து அஸ்மா எனப்படும் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் ஏற்கனவே திருமணமானவர் என்பது, அரசாங்க திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்காக இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததும் அம்பலமானது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூர் முகமது என்பவரை அஸ்மா மணமுடிந்துள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறுகளைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களாக, அஸ்மா தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர்களின் விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எருமைக்காக திருமணம்:

இந்நிலையில் தான் உத்தரபிரதேச அரசின் வெகுஜன திருமண திட்டம் குறித்து அஸ்மா கேள்விப்பட்டுள்ளார். அந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்பவர்களுக்கும், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பாத்திரங்கள், புதுமண தம்பதிக்கு திருமணத்திற்கான உடைகள், வெள்ளி மெட்டி, கொலுசு மற்றும் சுவர் கடிகாரம் ஆகியவை வழங்கப்படும். இதனை அறிந்ததும் தனது உறவினர் ஜாபர் அகமது உடன் சேர்ந்து ஒரு திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, திருமணத்திற்கு கிடைக்கும் பரிசுகளை பகிர்ந்துகொள்வதோடு, கிடைக்கும் பணத்தை கொண்டு எருமை மாடுகளை வாங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மருமகளை போட்டுக் கொடுத்த மாமனார்..

இந்நிலையில் தான் மருமகள் அஸ்மாவின் திட்டத்தை அறிந்த மாமனார், திருமணம் நடைபெறும் பகுதிக்கு விரைந்து வந்து உண்மைய போட்டு உடைத்துள்ளார். மேலும், தனது மகனுக்கும் அஸ்மாவிற்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழையும் சமர்பித்துள்ளார். இதையடுத்து, தலைமை வளர்ச்சி அதிகாரி அஸ்வினி குமார் மோசடி முயற்சி தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, முதலமைச்சரின் வெகுஜன திருமணத் திட்டத்தின் விதிகளை மீறியதற்காகவும், திட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக பயனடைய முயன்றதற்காகவும், அரசுப் பணிகளைத் தடுத்ததற்காகவும் அஸ்மா மற்றும் ஜாபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget