மேலும் அறிய

Shocking Video: வாரணாசிக்கு வந்த ஜோடி.. தண்ணீரை ஊற்றி அவமானப்படுத்தி, அட்டகாசம் செய்த கும்பல்.. அதிர்ச்சி வீடியோ

UP Holi Viral Video: ஹோலி பண்டிகையின்போது, வாரணாசி வந்த ஜோடி மீது தண்ணீரை ஊற்றி அட்டகாசம் செய்த கும்பலின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கருத்துகள் வலுத்து வருகின்றன

ஹோலி பண்டிகையானது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள மாநிலங்களில் பெரும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவாக பார்க்கப்படுகிறது.

ஹோலி பண்டிகை

இந்த விழாவின்போது, அன்புக்குரிய உறவுகள் மீது வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ச்சியையும் அன்பையும் வெளிப்படுத்தும், கொண்டாடும் விழாவாக பார்க்கப்படுகிறது. சிலர் வண்ண கலவையிலான நீரை, அதை ஏற்பவர்களின் மீது ஊற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஹோலி பண்டிகையானது மார்ச் 25-ஆம் தேதி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, உத்தர பிரதேசம்  வாரணாசியில் நடந்த சம்பவம் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை கிளப்பிவருகிறது.

கும்பலின் கொடூரம்:

அந்த வீடியோவில், ஒரு தம்பதி  இருவரும் நடந்து சென்று  கொண்டிருக்கும்போது, அங்கிருக்கும் கும்பல் ஒன்று அந்த ஜோடியின் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் கோபமடைந்த  இருவரும், தண்ணீரை ஊற்ற வேண்டாம் என்று எச்சரித்தனர். இருப்பினும் மீண்டும் அந்த கும்பலில் இருந்தோர், தண்ணீரை ஊற்றி அட்டகாசம் செய்தனர்.  அந்த கும்பலில் இருந்தவர்கள் செய்வதை பார்த்து, அங்கிருக்கும் சிறுவன் ஒருவனும், தவறு என்று உணராது தம்பதி மீது தண்ணீர் ஊற்றினான். இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோலி கொண்டாட்ட தினத்தின்போது, ஹோலி பண்டிகையை மற்றவர்களை அவமானப்படுத்துவதற்காக, தவறாகப் பயன்படுத்துவது, பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு கண்டிக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை தேவை:

இது குறித்து சமூக வலைதள பயனர் ஒருவர் தெரிவிக்கையில், ”ஒரு விழாவை தவறாக பயன்படுத்தும் இவர்களை சும்மா விடக்கூடாது. மேலும் கும்பலில் பெரிய நபர்கள் செய்வதை பார்த்து, சிறியவர்களும் ஈடுபடுவது சமூகம் எப்படி வளர்கிறது என்பதை காண்பிக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார். ஹோலி அன்று, இஸ்லாமியர்கள் மீதும் வலுக்கட்டாயமாக வண்ணங்களை ஊற்றிய வீடியோ ஒன்று பரவி, அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது

சுதந்திரமடைந்த இந்தியாவில், மகிழ்ச்சியாக நடமாட முடியாத சூழல் சில இடங்களில் நிகழ்வதை பார்க்கும்போது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அரசாங்கம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற செயல்கள், இனி வருங்காலங்களில்  நிகழாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget