மேலும் அறிய

UP Bill : பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இனி முன்ஜாமீன் கிடையாது..! புதிய சட்டமசோதா நிறைவேற்றம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அதிகளவில் பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இதை தடுக்க முடியவில்லை. கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட (உத்தரப் பிரதேச சட்ட திருத்த) மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

 

உத்தர பிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, சட்டத்திருத்த மசோதா மீது சபையில் பேசுகையில், "போக்சோ சட்டம், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்ஜாமீன் மறுப்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற சாட்சிகளை, குற்றம் சாட்டப்படுபவர்கள் மிரட்டுவதிலிருந்தும் துன்புறுத்துவதிலிருந்தும் 
தடுக்க இந்த ஏற்பாடு உதவும்" என்றார்.

உத்தரப் பிரதேச பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு (திருத்த) மசோதா, 2022, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கலவரத்தில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு கோருவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களில் இருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சுரேஷ் குமார் கன்னா, "கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்திற்கு இந்தத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. குற்றவாளியிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி, கலவரத்தில் உயிர் இழந்தவரை சார்ந்திருந்த நபர் இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யலாம்.

 

தீர்ப்பாயத்திற்கு இதுபோன்ற வழக்குகளை தானாக முன்வந்து விசாரணை நடத்த உரிமை உண்டு. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கைக்கான செலவை குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் திருத்த மசோதா வழிவகை செய்கிறது" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
Manickam Tagore : ‘Worst MP’ மாணிக்கம் தாகூருக்கு எதிராக கமெண்டுகளை தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்..!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
Embed widget