மேலும் அறிய

UP Bill : பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இனி முன்ஜாமீன் கிடையாது..! புதிய சட்டமசோதா நிறைவேற்றம்..!

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் அதிகளவில் பாலியல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இதை தடுக்க முடியவில்லை. கடந்தாண்டு தேசிய தலைநகர் டெல்லியில் தினமும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நாட்டின் பாதுகாப்பற்ற பெருநகரமாக டெல்லி திகழ்வதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதைத் தடுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்ட (உத்தரப் பிரதேச சட்ட திருத்த) மசோதா 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

 

உத்தர பிரதேச சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, சட்டத்திருத்த மசோதா மீது சபையில் பேசுகையில், "போக்சோ சட்டம், பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் முன்ஜாமீன் மறுப்பது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புகளை குறைக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற சாட்சிகளை, குற்றம் சாட்டப்படுபவர்கள் மிரட்டுவதிலிருந்தும் துன்புறுத்துவதிலிருந்தும் 
தடுக்க இந்த ஏற்பாடு உதவும்" என்றார்.

உத்தரப் பிரதேச பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு (திருத்த) மசோதா, 2022, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கலவரத்தில் சொத்துகளுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீடு கோருவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களில் இருந்து மூன்று ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சுரேஷ் குமார் கன்னா, "கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்திற்கு இந்தத் திருத்த மசோதா அதிகாரம் அளிக்கிறது. குற்றவாளியிடமிருந்து இழப்பீட்டுத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி, கலவரத்தில் உயிர் இழந்தவரை சார்ந்திருந்த நபர் இழப்பீடு கோரி மேல்முறையீடு செய்யலாம்.

 

தீர்ப்பாயத்திற்கு இதுபோன்ற வழக்குகளை தானாக முன்வந்து விசாரணை நடத்த உரிமை உண்டு. இதுபோன்ற வழக்குகளில் காவல்துறையின் நடவடிக்கைக்கான செலவை குற்றவாளிகளே ஏற்க வேண்டும் என்றும் திருத்த மசோதா வழிவகை செய்கிறது" என்றார்.

தலைப்பு செய்திகள்

வேலை விட்டாலும் PF பணத்திற்கு வட்டி உண்டு! 58 வயது வரை கவலை வேண்டாம்.
வேலை விட்டாலும் PF பணத்திற்கு வட்டி உண்டு! 58 வயது வரை கவலை வேண்டாம்.
வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
வங்கி வேலைகள்: AI மாற்றம், புதிய திறன்களே உங்கள் எதிர்காலம்!முழு விபரம் தெரிந்துகொள்ளுங்கள்.
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Top 10 Headlines Today: ஜூலை 21 டாப் 10 செய்திகள்: நீட் போராட்டம், நாடாளுமன்ற அமளி, மேகதாது சர்ச்சை!
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
Temples Trustees : 8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
8,193 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்.! தகுதி என்ன.? விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது.?
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
Embed widget