மேலும் அறிய

Green Hydrogen: இந்த எரிபொருள்தான் எதிர்காலம்.. ரகசியம் சொன்ன மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி

ஹைட்ரஜன் எரிபொருள் என்பது நிலையான ஆற்றலை தேடிய பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது.

பல்வேறு சவால்களை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் என்பது உலக அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. எனவே, மாறி வரும் உலக ஒழுங்கின் காரணமாகவும் காலநிலை மாற்றத்தின் விளைவாகவும் புதுப்பிக்கத்தக்க எரிபொருளின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அந்த வகையில், ஹைட்ரஜன் எரிபொருள் என்பது நிலையான ஆற்றலை தேடிய பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படுகிறது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்:

அதன் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி மாதம், 19 ஆயிரத்து 744 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய மையமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில், பசுமை ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிபொருள் என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், "இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்த மக்கள் விரும்ப மாட்டார்கள்.

"பசுமை ஹைட்ரஜன் வெற்றி பெறும்"

ஏனெனில், தேர்வு செய்வதற்கு பல எரிபொருள்கள் இருக்கும். உள்நாட்டில் தேவை இருக்கும்போதும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் போதும் பசுமை ஹைட்ரஜன் வெற்றி பெறும். கடந்த 2021 ஆம் ஆண்டில், செங்கோட்டையில் சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பசுமை ஹைட்ரஜனை பயன்படுத்துவது பற்றி பேசினார். பலர் அதுகுறித்து கேள்வி எழுப்பினர். செங்கோட்டையில் இருந்து பிரதமர் கூறும்போது, ​​அதை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

பசுமை ஹைட்ரஜனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்து ஹர்தீப் பூரியிடம் கேட்டதற்கு, விரகு மற்றும் நிலக்கரியிலிருந்து எல்பிஜி சிலிண்டர்களுக்கு நாட்டு மக்கள் மாறியதன் உதாரணத்தை எடுத்துக்கட்டாக கூறினார். 

"முன்பு எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவது கடினமாக இருந்தது.  பெண்கள் உணவு சமைக்க நிலக்கரியைப் பயன்படுத்தினர். அது நச்சுத்தன்மை வாய்ந்தது. அங்கிருந்து நகர்ந்தோம். உஜ்ஜவாலா திட்டம் ஒன்பது கோடி காஸ் சிலிண்டர்களை வழங்கியது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கார்களைப் பொறுத்தவரை, மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோலை உயிரி எரிபொருளுடன் கலப்பது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும். 20 சதவிகித கலப்பு இருந்தால், வாகன பாகங்களில் அரிப்பு ஏற்படாது. பாகங்கள் சிறந்த செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று தொழில்நுட்ப ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், நீங்கள் 20 சதவீதத்திற்கு மேல் கலக்க முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது" என ஹர்தீப் பூரி தெரிவித்தார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget