மேலும் அறிய

`காவல்துறையால் ஒரு விவசாயி கூட உயிரிழக்கவில்லை!’ - விவசாயிகள் போராட்டம் பற்றி மத்திய அரசின் தகவல்

மத்திய அரசுத் தரப்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு விவசாயி கூட காவல்துறையின் நடவடிக்கைகளால் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுத் தரப்பில் இன்று நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் போராட்டத்தில் ஒரு விவசாயி கூட காவல்துறையின் நடவடிக்கைகளால் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகக் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு விவசாயச் சங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தச் சட்டங்கள் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டு முழுவதும் டெல்லியின் எல்லைகளில் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற அமைப்பு நடத்திய போராட்டம் தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. போராடிய விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியதால், இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. 

மாநிலங்களவைக்கு அளிக்கப்பட்டுள்ள எழுத்துப் பூர்வ பதிலில், மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று பேசிய போது, `விவசாயிகளின் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய நிவாரணம் என்பது அவர்களின் மாநில அரசுகளுடன் அவர்கள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரம்’ என்று கூறியுள்ளார். மேலும், விவசாயிகளின் போராட்டத்தின் போது காவல்துறையின் நடவடிக்கைகளால் ஒரு விவசாயியும் உயிரிழக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

`காவல்துறையால் ஒரு விவசாயி கூட உயிரிழக்கவில்லை!’ - விவசாயிகள் போராட்டம் பற்றி மத்திய அரசின் தகவல்

காங்கிரஸ் கட்சியின் தீரஜ் பிரசாத் சாஹூ, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் கூட்டாக எழுப்பிய கேள்விக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தற்போது பதிலளித்துள்ளார். இந்தக் கேள்விகளில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக மத்திய அரசுத் தரப்பில் நிவாரண உதவி வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

காங்கிரஸ் கட்சி உள்பட நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் தொடர்பான விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றன. 

`காவல்துறையால் ஒரு விவசாயி கூட உயிரிழக்கவில்லை!’ - விவசாயிகள் போராட்டம் பற்றி மத்திய அரசின் தகவல்

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் பெற்ற சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாயிகளின் கூட்டுச் சங்கம் சார்பில் வரும் டிசம்பர் 11 அன்று `வெற்றி தினம்’ எனக் கொண்டாடப்படும் எனவும், விவசாயிகள் வீடு திரும்பும் வரை வெற்றி முழக்கங்கள் எழுப்பபப்டும் எனவும் கூறிப்பட்டுள்ளது. சம்யுக்தா கிஸான் மோர்ச்சாவின் கீழ் சுமார் 40 விவசாயச் சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் முதலான மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களைப் பின் வாங்கக் கோரி, டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த நவம்பர் 29 அன்று, மத்திய அரசு இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் பின்வாங்குவதாக அறிவித்தது. மேலும் நாடாளுமன்றத்திலும் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget