மேலும் அறிய

சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

சபரிமலையில் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும் - தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை மகர ஜோதி  வழி​பாட்​டில் இது​வரை இல்​லாத அளவுக்கு கட்​டுக்​கடங்​காத கூட்​டம் திரண்​ட​தால் நேற்று பெரும் நெரிசல் ஏற்​பட்​டது. குடிநீர், கழிப்​பிடம் உள்​ளிட்ட அடிப்​படை தேவை​களுக்கு பக்​தர்​கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.  8 மணி நேரத்​துக்கும் மேல் காத்​திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்​தனர்.


சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோயில் நடை திறக்​கப்​பட்​டது. இது​வரை சுமார் 6.5 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்துள்ளனர்.  உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் கடந்த 2 நாட்​களாகவே அதி​கரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில் சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் நேற்று இருந்​தது. எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோயில், மரக்​கூட்​டம், அப்​பாச்​சிமேடு, பெரிய நடைப்​பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் இருந்​தது. குறிப்​பாக சன்னி​தானத்​தில் இருந்து மரக்​கூட்​டம் வரை ஒதுங்​கக்​கூட இடம் இல்​லாத நிலை​யில் நெரிசல் ஏற்​பட்​டது. மேலும் பம்பை பாலத்​தின் தொடக்​கத்​தில் இருந்து திரு​வேணி சங்கமம், கணபதி கோயில் ​வா​யில் வரை நெரிசல் ஏற்​பட்​டது.

இரு​முடி​யுடன் 8 மணி நேரத்​துக்​கும் மேல் காத்​திருந்து சன்னிதானத்தை அடை​யும் நிலையே நேற்று இருந்​தது. இதனால் குடிநீர், கழிப்​பிடம், உணவுக்கு பக்​தர்​கள் சிரமப்​பட்​டனர். இலவச குடிநீர் வழங்​கப்​படு​வதும் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் பக்தர்கள் பரிதவித்தனர். அளவுக்கு மீறிய கூட்​டத்தைகட்​டுப்​படுத்​துவது காவல்​துறை,சிறப்பு அதிரடிப்​படை​யினருக்கு பெரும் சவாலாக உள்​ளது. ஸ்பாட் புக்​கிங்கை குறைத்து கூட்​டத்தை முறைப்​படுத்தி அனுப்​பி​னால்​தான் ஐயப்​பனை சிரமமின்றி தரிசிக்க முடி​யும் என்று பக்​தர்​கள்​ கோரிக்​கை விடுத்​துள்​ளனர்​.

இந்த நிலையில், குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி சாதாரண பக்தா்கள் தாங்களே எழுதி, இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்களையும் ஒலிபரப்ப திருவிதாங்கூா் தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இதுவரை சபரிமலை சன்னிதானத்தில் கே.ஜே.யேசுதாஸ், ஜெயவிஜயா போன்ற புகழ்பெற்ற பாடகா்கள் பாடிய பாடல்கள் மட்டுமே ஒலிபெருக்கி வழியாக இசைக்கப்பட்டு வருகின்றன.

அதிகாலையில் நடை திறக்கும்போது யேசுதாஸின் ‘வந்தே விக்னேஸ்வரம்’ மற்றும் இரவு நடை அடைக்கும்போது ‘ஹரிவராசனம்’ பாடல்களும், பிற்பகல் 3 மணிக்கு நடை திறக்கும்போது ஜெயவிஜயாவின் ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடலும் இசைக்கப்படுகிறது. பக்தா்களின் ஆன்மிக பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அவா்கள் உருவாக்கிய புதிய பாடல்களையும் இனி ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்க தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்தப் புகழ்பெற்ற பாடல்களுடன் அறிவிப்புகளுக்கு இடைப்பட்ட நேரங்களில், சாமானிய பக்தா்களின் புதிய பாடல்களும் ஒலிபரப்பாகும்.


சபரிமலையில் கட்டுக்கடங்காமல் கூட்ட நெரிசல்! புதிய பாடல்கள் ஒலிபரப்பு: தேவசம் போர்டின் அதிரடி முடிவு!

பாடல்களை சன்னிதானத்தில் உள்ள தேவசம் அதிகாரியிடம் பக்தா்கள் நேரடியாக வழங்கலாம். பக்தா்கள் சமர்ப்பிக்கும் பாடல்கள் சொந்தமாக இயற்றப்பட்டதாகவும், இசையமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். பாடலாசிரியா், இசையமைப்பாளா், பாடகா் ஆகிய மூவரும் இணைந்து, சமா்ப்பிக்கப்படும் பாடலானது தங்களின் சொந்த முயற்சி என்றும், இதற்கு வேறு எவரும் காப்புரிமை கோர முடியாது என்றும் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். பக்தா்கள் சமா்ப்பிக்கும் அனைத்துப் பாடல்களும் தரம் மற்றும் ஆன்மிக கருத்துகளின் அடிப்படையில் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். தகுதியான பாடல்கள் தோ்வு செய்யப்பட்டு, சபரிமலையின் அதிகாரபூா்வ ஒலிபரப்புப் பட்டியலில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget