மேலும் அறிய

Uber Bus: ஆபீஸ் போறதுக்கு கஷ்ட படுறீங்களா? விரைவில் பஸ் சேவை...அரசுடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம்!

இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Uber Car: இந்தியாவில் கொல்கத்தா பகுதியில் விரைவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கால் டாக்ஸி சேவை

நாட்டில் பல்வேறு நகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களுடன் ஒப்பந்தம் அடிப்படையில்  ஆயிரக்கணக்கானோர் கால் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றனர். சென்னை உள்பட நாடு முழுவதும் பல்வேறு நகரகளில் வாடகை ஆட்டோ, கார், பைக் என  அனைத்தும் இயங்கி வருகிறது. ஆன்லைன் செயலி மூலமாக முன்பதிவு செய்தால் நினைத்த இடத்தில் இருந்து நினைத்து இடத்தில் சென்றடைய முடியும்.

மெட்ரோ நகரங்களாக இருக்கும் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் ஊபர், ஒலா போன்ற நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி வாடகை கார்கள், ஆட்டோக்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். 

பேருந்து சேவையில் ஊபர் நிறுவனம்:

இந்த நிலையில், அடுத்த கட்டமாக ஊபேர் நிறுவனம் பேருந்து சேவையை கொண்டு வர முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கொல்கத்தாவில் பேருந்து சேவையை தொடங்க உள்ளதாக  அறிவித்தள்ளது. அடுத்த ஆண்டு  மார்ச் முதல் இந்த சேவை  கொல்கத்தாவில் அறிமுகமாக உள்ளது.  இதற்காக மேற்கு வங்க போக்குவரத்து  துறையுடன் ஊபர்  நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

ஊபர் ஷட்டில் (Uber Shuttle) என இந்த பேருந்து சேவைக்கான ஒப்பந்தம் நேற்று  நடைபெற்ற வர்த்தக உச்ச மாநாட்டில் கையெழுத்தானது.  வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து அலுவலகம் வரைக்கும்  பேருந்திலேயே பயணிக்கும் வகையில் இந்த சேவை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பேருந்து முழுவதும் ஏசி வசதி கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 60 பேருந்துகளை இயக்க ஊபர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

60 குளிர்சாதன பேருந்துகள்:

ஊபர் பேருந்து காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த சேவை கிடைக்கும் என்று ஊபர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  50 பேர் வரை அமரும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த பேருந்துகள் முன்கூட்டிய வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்  இயக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து நகரின் ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இருக்கும் பகுதிகளுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்படும். அலுவலகத்திற்கு செல்பவர்களை கவரும் வகையில், ஊபர் நிறுவனம் பேருந்து சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ஊபர் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "ஊபர் நிறுவனம் ஷட்டில் பேருந்து சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  முதற்கட்டமாக கொல்கத்தாவில் அறிமுகமாக உள்ளது. வரும் காலங்களில் பேருந்துகள் எண்ணிக்கையும், இயக்கப்படும் வழித்தடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஊபர் செயலி மூலமே முன்பதிவு செய்து கொள்ளலாம். 2025ஆம் ஆண்டிற்குள் 10 மில்லியன் டாலர் மதிப்புக்கு ஊபர் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget