மேலும் அறிய

இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

‛என் மகன்களில் யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை மோசமானாலும், அது இன்னொருவனை பாதிக்கும், உயிரிழப்பும் அதே மாதிரி நடக்கும்னு நாங்க நினைக்கல; கொரியாவிற்கு செல்ல வேண்டும், எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அவங்களோட இறுதி ஆசையா இருந்துச்சு " என கண்ணீர் வடிக்கிறார்கள் பெற்றோர்.

தினமும் வெளியாகும் கொரோனா மரணங்கள் குறித்தான செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. தொடரும் இளம் வயதினரின் மரணங்கள் சமூகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசிக்கும் கிரிகோரி என்பவரின் 24 வயதான இரட்டை மகன்கள்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

ஜோஃப்ரெட் வர்கீஸ், ரால்ஃபிரட் ஜார்ஜ்  என்ற இரட்டை பொறியியல் பட்டதாரிகள், ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக  பணிபுரிந்து வந்துள்ளனர். கொரோனா சூழல் காரணமாக வீட்டில் இருந்து பணிபுரிந்த இருவருக்கும் கடந்த மாதம் காய்ச்சல் இருந்ததன் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் கடந்த மே 1 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட  அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவில் இருவருக்கும்  நெகட்டிவ் என வந்தாலும் , மூச்சு விடுவதில் சிரமம் தொடரவே அவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.  பொதுப்பிரிவில் இருந்த அவர்களுக்கு ஐசியூ பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மே 13 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஜோஃப்ரெட்  உயிழந்தார். ஒட்டிப்பிறந்த சகோதரனின் நிலையை ரால்ஃபிரட்டிற்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளனர் பெற்றோர்.   எனினும்   ரால்ஃபிரட் தனது அம்மாவிற்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு , தான் மீண்டு வருவதாக கூறி தனது சகோதரனின் நிலைக்குறித்து கேட்டுள்ளார், அவர்கள் "ஜோஃப்ரெட்  நன்றாக இருக்கிறார் " என கூறியதும் " பொய் சொல்லாதீங்கம்மா" என்ற பதிலை  தனது தளதளத்த குரலில் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.

இறப்பிலும் இணைந்த இரட்டையர்கள்; கொரோனாவிற்கு அடுத்தடுத்து பலி

ஜோஃப்ரெட் உயிரழந்த 1 மணி நேரத்திற்கு பிறகு  ரால்ஃபிரட்டும் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். இருவரும் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அவர்களது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்து பகிர்ந்து கொண்ட கிராக‌ரி " என் மகன்கள்ல யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை மோசமானாலும், அது இன்னொருவனை பாதிக்கும், ஆனா இப்படி உயிழப்பு வரை போகும்னு நாங்க நினைக்கல, கொரியாவிற்கு செல்ல வேண்டும், எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அவங்களோட இறுதி ஆசையா இருந்துச்சு " என்கிறார் கண்ணீர் மல்க. கிராகரிக்கு மற்றொரு மகன் உள்ள நிலையில் அவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு குடும்பத்தில் இரட்டை குழந்தையாய் பிறந்த இரு மகன்களை இழந்த அந்த பெற்றோர், தற்போது எஞ்சியிருக்கும் மகனையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க போராடி வருகின்றனர். இழப்பு பெரிது என்பதால் அவர்களை தேற்ற முடியாமல் உறவினர்களும் நொந்து போயுள்ளனர்.  இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ இந்த கொடூர கொரோனா. 

தலைப்பு செய்திகள்

டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறினால் இனி தப்ப முடியாது!!! ஜூலை 1 முதல் புதிய சட்டம்!..
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!
PhonePe வாலட் ஆக்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? பராமரிப்பு கட்டணத்திலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget