மேலும் அறிய

ஏசி கோச்சில் வெளியான புகை... பதறி போன பயணிகள்... ஒடிசா ரயிலில் பரபரப்பு..!

செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து உலக மக்களை அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியது. ரயில்வே அமைப்பில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளை இந்த விபத்து அம்பலப்படுத்தியது. எனவே, நவீன பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்தி பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த நிபுணர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏசி கோச்சில் இருந்து வெளியான புகை:

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஏற்படுத்திய ரணமே ஆறாத நிலையில், செகந்திராபாத் - அகர்தலா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் இருந்து புகை வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டிக்குள் இருக்கும் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் இருந்து புகை வெளியேறுவது குறித்து பயணிகள் ரயில்வே அதிகாரிகளை எச்சரித்தனர்.

இதையடுத்து, ஒடிசா மாநிலம் பிரம்மபூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக புகையை கட்டுப்படுத்திய போதிலும், பீதியடைந்த பயணிகள் மீண்டும் மின்கசிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் குறிப்பிட்ட பெட்டியில் பயணிக்க மறுத்துவிட்டனர். ரயில் பெட்டியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, பயணிகள் சிலர், முதலில் B-5 பெட்டியில் புகை வருவதைக் கண்டு அலாரம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கினர். மீண்டும் ரயிலில் ஏற மறுத்தனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், "ரயில் பெட்டியில் சிறிய அளவில் மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பிரம்மாபூர் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்:

பிரம்மாபூர் நிலையத்திற்கு அருகில் செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்ட பின்னர், B-5 பெட்டியில் ஏறி பணியில் இருந்த ஊழியர்கள் பிரச்னையை உடனடியாக சரி செய்தனர்" என்றார்.

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விபத்தாக இந்த ரயில் விபத்து கருதப்படுகிறது. இதில், சிக்கி 288 பேர் உயிரிழந்தனர்.

ரயில்கள் சரியா செல்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய உதவும் இன்டர்லாக்கிங் அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி, சதி செயல் ஆகியவை ரயில் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ரயிலின் தடத்தை மாற்றக்கூடிய மின்னணு இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல, விபத்தில் சிக்கிய ரயில்கள் அதிவேகமாக இயக்கப்படவிலலை என ரயில்வே போர்டு உறுப்பினர் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்திருந்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
Jana Nayagan Audio Launch Live: பாட்டு பாடி மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் அம்மா ஷோபா
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Ration Shop: ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
ரேஷன் கடையில் உணவு பொருட்கள்.! புதிய நடைமுறை அறிவிப்பு- ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
Embed widget