மேலும் அறிய

OTP Traceability: ஒடிபி ஆய்வு நடைமுறை, தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு - டிராய் அறிவிப்பு

OTP Traceability TRAI: தொலைதொடர்பு நிறுவனங்களின் பயனர்களுக்கான ஒடிபி உள்ளிட்ட குறுஞ்செய்திகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையை, அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

OTP Traceability Trai: குறுஞ்செய்திகள் வாயிலாக நிகழ்த்தப்படும் மோசடிகளை தவிர்க்கும் நோக்கில், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான இந்த புதிய கட்டுப்பாட்டை டிராய் கொண்டுவந்துள்ளது.

ஒடிபி ஆய்வு நடைமுறை:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Trai), வணிகச் குறுஞ்செய்திகளுக்கான ஒன் டைம் பாஸ்வேர்ட் எனப்படும் OTPகள் உள்ளிட்டவற்றை, பயனர்கள் அணுகும் முன்பே தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆய்வு செய்யும் நடைமுறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 1, 2024 வரை நீட்டித்துள்ளது. இந்த ஆணையானது குறுஞ்செய்தி சேவைகளை மோசடிக்காக தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தால் ஏற்படக்கூடிய சேவை பாதிப்புகள் குறித்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிப்பதாக டிராய் முடிவு செய்துள்ளது. வங்கிகள் மற்றும் டெலிமார்க்கெட்டர்கள் உட்பட பல வணிக அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியாக புதிய மாற்றங்களுக்கு இன்னும் தயாராகாததால், நவம்பர் 1 முதல் டிரேசபிலிட்டி விதியை அமல்படுத்துவது பெரிய அளவிலான செய்தித் தடைகளுக்கு வழிவகுக்கும் என்று டெலிகாம் நிறுவனங்கள் எச்சரித்தன. அதனடிப்படையில் தற்போது காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய கால அட்டவணை:

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, நவம்பர் 1 ஆம் தேதிக்கான முந்தைய காலக்கெடுவுக்குப் பதிலாக, வரும் டிசம்பர் 1 முதல் டிரேசபிளிட்டி ஆணைக்கு இணங்காத செய்திகள் தடுக்கப்படும்.  பெரும்பாலான டெலிமார்கெட்டர்கள் மற்றும் முதன்மை நிறுவனங்கள் (PEs) இன்னும் தங்கள் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதால், OTPகள் போன்ற முக்கியமான செய்திகளை தடையின்றி வழங்குவதை உறுதிசெய்ய இந்த காலக்கெடுவை நீட்டிக்கும் நடவடிக்கை அவசியம் என்று டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துரைத்தன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 1.5 முதல் 1.7 பில்லியன் வணிகச்குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக தொழில்துறை மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த எண்ணிக்கையிலான குறுஞ்செய்திகள் தடுக்கப்பட்டால் பயனர்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கத்தை நினைத்துப் பாருங்கள். எனவே, பெரிய இடையூறுகளைத் தடுக்க, டெலிகாம் ஆபரேட்டர்கள் டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் PE களுக்கு  ஸ்டேடஸ் அப்டேட்களை அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர்.

டிராய் வழிகாட்டுதல்கள்:

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் கோரிக்கைகளை ஏற்று, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் PE-TM (முதன்மை நிறுவனம்-டெலிமார்கெட்டர்) தேவையான முழு நடவடிக்கைகளை விரைவில் உறுதிசெய்யுமாறு கேரியர்களுக்கு டிராய் அறிவுறுத்தியது. இணங்கத் தவறிய நிறுவனங்கள் நவம்பர் 30 வரை தினசரி நினைவூட்டல்களைப் பெறுவார்கள். டிசம்பர் 1 முதல், வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் இணைப்புகளை கொண்ட செய்திகள்  நிராகரிக்கப்படும் என்று டிராய் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த சமீபத்திய நீட்டிப்பு ஸ்பேமைக் கட்டுப்படுத்த தொழில்துறை இணக்கம் தொடர்பாக டிராய் வழங்கிய இரண்டாவது முறையாகும். முன்னதாக, செய்தி அனுமதிப்பட்டியலை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை ரெகுலேட்டர் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget