மேலும் அறிய

ஆன்லைன் டெலிவரி வேலை செய்றீங்களா? முதல்ல இதை பண்ணுங்க.. உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்!

e-Shram தளத்தில் தங்களையும் தங்கள் ஊழியர்களையும் பதிவு செய்யுமாறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் பகுதி நேர பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் தங்கள் ஊழியர்களை e-Shram தளத்தில் பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆன்லைன் டெலிவரி மற்றும் பகுதி நேர வேலைகள்:

கடந்த 2021-22ஆம் ஆண்டு, இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களிலும் பகுதி நேரமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை 7.7 மில்லியனாக (77 லட்சம் பேர்) இருந்தது. இது வரும் 2029-30ஆம் ஆண்டுக்குள் 23.5 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்புகளை வழங்கி வந்தாலும், அதில் ஈடுபடும் ஊழியர்கள் சுரண்டலுக்கு உள்ளாவதாகவும் சமூக பாதுகாப்பு இன்றி இருப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், e-Shram தளத்தில் தங்களையும் தங்கள் ஊழியர்களையும் பதிவு செய்யுமாறு ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் பகுதி நேர பணிகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி கோரிக்கை விடுதிருப்பதன் மூலம் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பகுதி நேர ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு நன்மைகளை விரிவுபடுத்துவதில் மற்றொரு பெரிய நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது.

e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியம்:

அந்த தொழிலாளர்களுக்கும் சமூக நலத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு e-Shram தளத்தில் பதிவு செய்வது முக்கியமானது. அதே நேரத்தில் இத்தகைய பதிவு பயனாளிகளின் துல்லியமான பதிவேட்டை உருவாக்க உதவும்.

இந்த செயல்முறையை வழிநடத்த,  தொழிலாளர்கள் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்தல் மற்றும் அவர்களின் தரவைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பொறுப்புகளை கோடிட்டுக் காட்டும் நிலையான இயக்க நடைமுறையுடன் (எஸ்.ஓ.பி) அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

பதிவு செய்தவுடன்,  நடைபாதை தொழிலாளர்கள்  உலகளாவிய  கணக்கு எண்ணைப் (யு.ஏ.என்) பெறுவார்கள், இது முக்கிய சமூக பாதுகாப்பு நன்மைகளை அணுக அனுமதிக்கும். மத்திய அரசு, ஏ.பி.ஐ  ஒருங்கிணைப்புக்கான சோதனையை வெற்றிகரமாக முடித்து, பதிவு செயல்முறையை முன்னெடுத்து வருகிறது.

இந்தக் கூட்டு முயற்சி  செயலித் தொழிலாளர்களின் முழு நலனை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வழிகாட்டுதல்கள் மூலம், வேலை மற்றும் கொடுப்பனவுகள் உள்ளிட்ட தொழிலாளர்களின் விவரங்களைத் தவறாமல் புதுப்பிக்குமாறு அவர்களை வேலையில் அமர்த்துவோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துல்லியமான பதிவேடுகளைப் பராமரிக்க ஏதுவாக,  எந்தவொரு தொழிலாளியும்  வேலையிலிருந்து வெளியேறியிருந்தால், உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும்  பணியில் அமர்த்துபவர்களை இணைப்பதற்கு உதவுவதற்காக, தகவலை வழங்குவதற்கும், பதிவுக்கு வழிகாட்டுவதற்கும், செயல்பாட்டின் போது ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் கட்டணமில்லா உதவி எண் (14434) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான முயற்சியில் அவர்களை ஊக்குவிக்கவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் 18.09.2024 அன்று இத்தகைய தொழிலாளர்களை வேலையில் அமர்த்துபவர்களுடன் ஒரு சந்திப்பை  நடத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget