மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Today Headlines: ரயிலில் தள்ளி கொலைசெய்த இளைஞர் கைது.. ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
![Today Headlines: ரயிலில் தள்ளி கொலைசெய்த இளைஞர் கைது.. ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. இன்னும் பல முக்கிய செய்திகள்.. today news headlines in tamilnadu india october 14 top news today morning headlines news Today Headlines: ரயிலில் தள்ளி கொலைசெய்த இளைஞர் கைது.. ஹிஜாப் விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.. இன்னும் பல முக்கிய செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/77387e729a7c48b197895ebceb0c11d91665711026580571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தலைப்புச்செய்திகள்
தமிழ்நாடு :
- சென்னை பரங்கிமலை கல்லூரி மாணவியை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர் நள்ளிரவில் கைது.
- நளினி உள்ளிட்ட 5 பேர் விடுதலை கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் : நீதிமன்றத்தின் உத்தரவிற்கு கட்டுப்படுவோமென தமிழ்நாடு அரசு பதில்
- எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்காமான காண்ட்ராக்டர் ரூ.2000 கோடி சொத்து குவித்தது அம்பலம் : புதுக்கோட்டை வீட்டில் 2வது நாளாக ரெய்டு
- பள்ளிக்கல்வி துறையில் தேர்வு செய்யப்பட்ட 2,849 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை : வழங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின்
- காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-க்கு கீழ் குறைந்துள்ளது.
- பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- சென்னை விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியா:
- ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் 3வது நீதிபதி விசாரிப்பார்.
- கேரளா நரப்பலி விவகாரம்: மேலும் 26 பெண்கல் நரபலியா..? போலீசார் தீவிர விசாரணை
- நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் எம்பி சசி தரூர் நியமனம்
- பிரதமரின் தேசிய சிறார் விருதுக்கான கடைசித் தேதியை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் நகரில் பயங்தரவாதிகளுடனான மோதலின்போது படுகாயம் அடைந்த ராணுவ நாயுக்கு சிகிக்கை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உயிரிழந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தகவல்
- நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் வகையிலான இந்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள், ஆதார் பயன்பாடு என இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - ஐஎம்எஃப் புகழாரம்
- மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு பேரணியில் அண்ணா, கலைஞர், முக ஸ்டாலின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தனர்.
உலகம்:
- உக்ரைனின் 4 பகுதிகள் இணைப்பு : ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம் - இந்தியா உள்பட 35 நாடுகள் புறக்கணிப்பு
- பாகிஸ்தானில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல்
- கடல் எல்லையை பகிர்ந்து கொள்வதில் இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து கொள்வதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்
- காமிக்ஸ் புத்தகமாக வெளியானது “எலிசபெத்’ மகாராணியின் வாழ்க்கை.
விளையாட்டு:
- ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டி : 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
- மல்யுத்த வீரர் சாகர் கொலை வழக்கு.. ஒலிம்பிக்ஸில் வென்ற சுஷில் குமார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.
- எந்த பதவிக்கும் முடிவு காலம் உண்டு என சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஒலிம்பிக்
உலகம்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion