மேலும் அறிய
Advertisement
UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)
Headlines Today : தமிழகத்தில் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம்...இலங்கை அதிபர் அமீரகத்தில் தஞ்சம் அடைய திட்டம்..இன்னும் பல
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- கொரோனா தொற்று அதிகரிப்பால் தமிழகத்தில் மீண்டும் இன்று மெகா தடுப்பூசி முகாம் - 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
- வானகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் - இதுதொடர்பான வழக்கில் நாளை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது
- உயர்கல்வி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - இதுவரை 2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்
- திண்டுக்கல் தொழிலதிபரை டெல்லிக்கு அழைத்து கடத்திய கும்பல் கைது - 3 மாநில காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை
- தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் - பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
இந்தியா :
- கர்நாடகாவின் கபிணி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் வெளியேற்றம் அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
- 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் அதானி நிறுவனம் பங்கேற்பு அம்பானி நிறுவனத்துடன் போட்டி
- நடப்பு நிதியாண்டின் 2 ஆம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல்
- அமர்நாத்தில் மேக வெடிப்பினால் கொட்டிய கனமழையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
- அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவில் பெட்ரோல் உட்பட புதைபடிவ எரிபொருளுக்கு தடை விதிக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
- நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல யூ-ட்யூபர் கைது
- இந்தியாவில் ஜூன் மாதத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் விற்பனை 17.9% அதிகரிப்பு
உலகம் :
- இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக முடிவு
- போர்க்களமான இலங்கை தலைநகர் கொழும்பு - அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டுக்கும் தீ வைப்பு
- மக்கள் போராட்டத்துக்கு பயந்து தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைய திட்டம் என தகவல்
- இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளின் உக்ரைன் தூதர்கள் நீக்கம் - அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு
- கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மத்தியில் கருக்கலைப்பை பாதுகாக்கும் உத்தரவில் ஜோ பைடன் கையெழுத்து
விளையாட்டு :
- இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி - 3 போட்டிகள் கொண்ட தொடரையும் கைப்பற்றியது.
- விம்பிள்டன் டென்னிஸில் முதல் கிரான்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றார் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா
- மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வணிகம்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion